உண்மையான சேரி நாய்

13 11 2009

இந்த விளம்பரத்தை வழங்குபவர்கள் www.sos-usa.org . விளம்பரம் இடம் பெரும் தளம் beta.thehidu.com

slumdog

 







Pelican Brief – John Grisham

27 10 2009

pelican briefJohn Grisham எழுதி 1993ல் திரைக்கு வந்த Pelican Brief படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. Denzil Washington மற்றும் Julia Roberts நடிப்பு வாழ்க்கையில் முழுமையாக மலராத நாட்களில் வெளிவந்துள்ளது.

இரண்டு அமேரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொல்லப் படுகின்றனர். இந்த கொலைகளுக்கும் அமேரிக்க வெள்ளை மாளிகைக்கும் தொடர்பிருக்கலாம் என சட்ட கல்லூரி மாணவியான ஜூலியா ராபர்ட்ஸ் சந்தேகித்து ஒரு அறிக்கை தயாரிக்கிறாள். அதனை படிப்பவர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர், இதனை தொடர்ந்து பத்திரிக்கையில் வேலை செய்யும் டென்சிலின் உதவி கொண்டு எப்படி உண்மையை வெளி உலகுக்குக் கொண்டு வருகிறாள் என்பதே கதைச் சுருக்கம்.

படம் 2:15 நேரம். மிகவும் நிதானமாக நகர , பாதி படம் பார்ப்பத்தற்குள் சலிப்புத் தட்டுகிறது. எந்த வித அதிர்ச்சி அளிக்கும் திருப்பங்களோ அல்ல திரில்லர்க்கான சுவாரசியமோ இல்லாத நிலையில் படத்தை சீக்கிரமா முடித்திருக்கலாம் என தோன்ற வைத்த படம்.





விளம்பரமில்லாமல் விசிலடிப்பவர்கள்

20 10 2009

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரனை உச்சநீதி மன்ற பதவிக்குப் பரிசீலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்து அதனை நிறைவேற்றியுமுள்ளனர் தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள்.

ஆனால் இவர்கள் யார் என்பது பொதுவில் யாருக்கும் தெரியவில்லை. அவுட்லுக் இணைய தளத்தில் இந்த விளம்பரம் விரும்பாதவர்கள் பற்றி படித்தேன். ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

There were eleven signatories to the original petition printed on the letterhead of the FJA, located on Armenian Street, the road that runs perpendicular to the High Court in Chennai Parrys. R. Vaigai was the convenor of the organisation, which was started about ten years ago and inaugurated by Justice Rajinder Sachar, now well-known for his report on the socio-economic status of Muslims in India. All eleven of them were public interest lawyers, who had for a number of years represented the landless poor, minorities, hapless consumers, women and Dalits.

In fact, R Vaigai and Anna Mathew had appeared for the Dalits of Sivaganga district who were denied participation in the Kandadevi car festival and had secured a landmark judgment in their favour in 2005. Sudha Ramalingam and Nagasaila are PUCL activists. Geeta Ramaseshan has been a child rights activist. She had also led a fact-finding committee into atrocities on Sikhs in Coimbatore in 1984 after Indira Gandhi’s assassination, on the basis of her report the High Court had awarded compensation to the victims. S S Vasudevan was a former regional director of Greenpeace and a legal aid activist fighting corruption. T Mohan and S Devikarani are environmental and consumer activists. Sriram Panchu, is a senior advocate and founder of the Consumer and Civic Action Group in Chennai, which has been a pioneer in the mediation programme initiated by the Madras High Court and has been a frontrunner for mediation programmes in other High Courts.

The members of the FJA were also petitioners and counsels in the famous Justice Kannadasan case, in which the judge’s appointment as president of Tamil Nadu State Consumer Commission was questioned on grounds of corruption and lack of integrity. The Madras HC had quashed the appointment of the judge and the SC, in a historic decision on 6 May 2009, had upheld it. In this case Anna Mathew, S S Vasudevan and Sudha Ramalingam were petitioners and R Vaigai, D Nagasaila, T Mohan and S Devikarani were counsel on record.

மேலும் படிக்க http://outlookindia.com/article.aspx?262388





நிலைமாற்றம்

6 10 2009

மொழி சீரான ஓட்டத்திற்காக , கிரந்தம் கலந்தும் எழுதலாம் என்பதே எனது நிலை. ஆனால் அது எந்த அளவுக்கு விபரீதத்தில் மொழியைக் கொண்டு செல்கிறது என்பதைக் காணவே இப்பதிவு. மேலும் தமிழ் விக்கியின் சில நிர்வாகிகள் குறித்து சில எண்ணங்கள்.

திராவிட மொழி அரசியலின்றி , சமஸ்கிரத காழ்ப்பின்றி மொழியின் அழகியலை அனுபவிக்கவும் , பரப்பவும் நம் தமிழ் மொழிக்காக இணையத்தில் சிலர் உள்ளனர். இவர்களில் சிலர் கிரந்தம் தனக்குத் தேவையில்லை என்ற நிலையை எடுத்துள்ளனர்.  கிரந்தம் தேவையென பல்லவர்கள் பிரபலப் படுத்தினாலும் அதன் தேவையின்றி பல ஆக்கங்கள் அக்காலம் முதற் கொண்டே வெளிவந்துள்ளன.

இவர்களை மொழித் தாலிபான்கள் எனத் தரக்குறைவாக பட்டம் கட்ட நினைப்பவர்கள் தான் உண்மையில் தங்களைத் தானே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

மொழி ஆர்வலர்களின் பங்களிப்பு தமிழ் கணிமை முதல் , இணையத்தில் கட்டற்ற களஞ்சியத்தை நிர்வகித்தல் , உலவியில் தமிழின் முதல் அகராதி தயாரிக்கும் முயற்சி வரை அவர்களின் வாழ் நாளில் கணிசமான நேரத்தை செலவழித்து வருகின்றனர். நவயுகத்தில் கணினி மயமாக்கம் எங்கும் பரவிக்கிடக்கும் இன்றைய நிலையில் இவர்களின் பணிப் போற்றத் தக்கதே.

சிக்கல்

அச்சூடகத்தில் – தமிழ் சிற்றிதழ்களில் தான் தமிழ் மொழிக்கான அடையாளம் இன்றும் இருக்கிறது.

வரும் 10 ஆண்டுகளில் , இன்று பரவலாகப் படிக்கப் படும் தமிழ் இதழ்களால் , இன்று நாம் காணும் தமிழ் மலினமாகி விடும் என்பதே நிதர்சணம். தமிழ் மொழியைப் பற்றி விவாதம் நடத்தும் பொழுதே (விஜய் தொலைக்காட்சியில்) தமிழில் மட்டும் பேச முடியாமல் திணறும் சமுதாயம் இன்று சென்னையில் உள்ளது ! இதனை விட மொழிக்கு என்ன கேவலம் இருக்க முடியும்.(இதே நிலை தெலுங்கிற்கு ஐதிராபாத்திலும் இருப்பதாக என் நண்பர் வருத்தப் பட்டார். )

ஒரு பத்தி தமிழில் படிக்க ‘கடுமையாக’ இருந்தால் ‘தனித்தமிழ்’ இயக்க வாதிகள் மொழியைக் கொல்கிறார்கள் என பதரும் மொழிக் காப்பாளர்கள், அவ்வாக்கியத்தை எப்படி எளிமையாகவும் மென்மையாகவும் மாற்ற முடியும் என்பதை ஏன் சொல்ல முன் வருவதில்லை ? மட்டம் தட்ட மட்டும் முதலில் நிற்பவர்களுக்கு எளிமை படுத்துவதென்றால் ஆங்கிலமாக்குவதா ?

கிரந்தம் தவிர்த்து எழுதுபவர்கள் தாலிபான்கள் எனில் கிரந்தம் கலந்து தான் எழுதுவேன் என்பவர்கள் கற்கால மனிதர்களா ?

கிரந்தமில்லாமல் எழுதலாம் என்கிற இயக்கம் எந்த அரசியல் அடிப்படையிலும் இன்று இணையத்தில் செயலாற்றவில்லை என்பதை என் ஒரு வருட இணைய இயக்கத்தில் காண்கிறேன்.

மொழியில் சீர்நிலையில்லாதது இன்றைய கணினி யுகத்தில் பெரும் சிக்கல்.

பிரச்சனை – பிரச்னை – பிரச்சினை என ஆளாளுக்கு ஒரு சொல்லைத் திரித்தால் எப்படி ஒரு மென்பொருள் சொல் திருத்தியயை உருவாக்க இயலும் ? சிக்கல் என்ற சொல்லினை பயன்படுத்தினால் சாலச் சிறப்புயென்றாலும் அதனை ஒரு அறிவுறுத்தாலாகவே முன் வைக்க விரும்புகிறேன்.  திட்டப்படுத்த முயலவில்லை.

விக்கியின் சில நிர்வாகிகள் குறித்து சில எண்ணங்கள்

கிரந்தமில்லாமல் எழுதுபவர்கள் செய்த ‘தவறு’ ஒன்றே என நினைக்கிறேன். ஒரு பொது தளத்தின் நிர்வாகியாக இருந்து கொண்டு கிரந்தத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாக பதிவுகள் எழுதியது பலரது மனத்திலும் ஐயத்தை எழுப்பியிருக்கிறது. இதனைக் களையவே இப்பொழுது பல மணித்துளிகள் செலவு செய்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மேலும் அவர்கள் ‘தா’ பற்றி யாராவது ஒரு சொல் உதிர்த்தால் அதற்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கி அதுவே வாய்க்கா வரப்பு விவாதமாகி விடுகிறது. அவதூறுகள் எனத் தெரிந்தால் அதனை புறம் தள்ளுவதே நன்று.

பொது வெளியில் , மேலும் அவதூறுகள் ஏற்படாமல் விக்கியைப் பாதுகாக்க வேண்டியது இவர்களின் தார்மீகப் பொருப்பு என கருதுகிறேன்.

***

குறிப்பு – நான் கிரந்தம் பற்றி முதிர்ச்சியின்றி ஏதாவது முன்னர் சொன்னதை இங்கே கொண்டு வந்து காட்ட வேண்டாம்.





‘உன்னைப் போல் ஒருவன்’

21 09 2009

புழுத்துப் போன அரிசியை ரேஷன் கடையில் கடைசியாக வாங்க நிற்பவர். தன் சொத்தினைப் பறி கொடுத்து விட்டு போலீசிடம் குற்றிவாளி போல் விசாரிக்கப்படுபவர். தினமும் காலை மாலையில் பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் காணக்கிடைப்பவர்.

- ‘உன்னைப் போல் ஒருவன்’

அதாங்க , திருவாளர். பொதுசனம். முகம் காட்ட விரும்பாத கோழை ஆனால் உணர்ச்சி வேகத்தால் [தார்மீகக் கோபமாம்] சமுதாயத்தைத் திருத்துகிறேன் என்று ஷங்கர் மற்றும் சுசி கணேசன் அவதாரங்களாய் வந்து திரையில் அபத்தமாக எதையாவது செய்வார்.

வழக்கமாக தானுண்டு , தன் குடும்பமுண்டு , தன் நாலு ஜான் நிலமுண்டு , தன் பிள்ளையைப் பிழைப்பிற்காக ‘கல்விச் சாலை’களுக்கு அனுப்பவதுண்டு , தங்கம் விலை உயர்வை நினைத்து தினம் தன் விதியை நொந்து கொண்டிருக்கும் திருவாளர். பொதுசனத்திற்கு தொலைக்காட்சி , தினசரிகளை விட்டால் வேறு வழியில் செய்திகளை அறிந்து கொள்ள நேரமின்மை –  ’அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் ?’ இல்ல ‘ரயில எரிச்சான்ல’னு ஒரு வரி விளக்கத்துடன் விலகி செல்பவரை தார்மீகக் கோபமெல்லாம் வருபவராகக் காட்டி இருக்கிறார்கள் ‘உன்னைப் போல் ஒருவனில்’.

திருவாளர். பொதுசனம் , வழக்கமாக சமூக அவலங்களுக்குப்பாஷாக மெழுகுவத்தி ஊர்வலமோ அல்லது மனிதச் சங்கலி அமைத்தோ தன் ‘எதிர்ப்பினை’ தெரிவிக்க விரும்பும் இவரை குஜராத்தில் நடந்த கலவரத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பவராகக் காட்டியிருப்பது திருவாளர். பொதுசனத்திற்கே அடுக்காது என நினைக்கிறேன்.

அப்புறம் திருவாளர். பொதுசனம் யாருனே தெரியாத மாதிரி பாத்துக்குகறாங்களாம். ‘இன்ஷா அல்லாவா…?’ என்று மனைவி அலைப்பேசியில் கேட்க ‘…ம்’ என்கிறார் தாடி வைத்த திருவாளர். வேற எதாவது மதத்துல ‘இன்ஷா அல்லாவா…?’னு கேட்கும் பழக்கம் உண்டா ? ஒரு வேளை பௌத்தர்கள் இவ்வாறு பேசிக் கொள்வார்களா ? சாண்விச் சாப்பிட்டா என்ன மதம் என தெரியாதா ? அட புத்திசாலிங்களா , ஏனையா இவ்வளவு பொலிடிக்கல் கரக்ட்னெஸ் ?

குஜராத்தில் ஒரு அப்பாவி கர்பிணிக் கருவருத்துக் கொல்லப் பட்டதற்கு கோயம்பத்தூரில் குண்டு வெச்சவனப் போட்டுத்தள்ளினால் அது தார்மீகக் கோபமாம்…ஒரே கொழப்பமய்யா! குஜராத் சம்பவத்தைத் தமிழ்நாட்டில் எப்படிங்க பொருத்த முடியும் ? லாஜிக் ரொம்பவே முட்டுது சாமி. பேசாம கோயம்பத்தூரப் பத்தி பேச வேண்டியது தானே ?

ஒரு மேடை நாடகத்திற்கு உரிய அல்ல விவரண படத்திற்குறிய கருவினை தமிழ் திரை மேக்கப் போட்டால் அது ‘மைல்கல்’ படமாக மாறிவிடுகிறது !!

திருவாளர். பொதுசனம் – அவர தனியா விட்டுருங்க சார் , தன் வேலையுண்டு அவருண்டுனு இருக்கிறார் , பிளீஸ் ! அடுத்த முறை ‘வளர்ச்சி’ பணிகளுக்காக மீண்டும் தேர்ந்தெடுப்பார் மோடியை !





துணிந்து பேசு !

9 09 2009

இந்த வாரம் யூதர்கள் தங்கள் பெயர்களை இழந்து நம்பர்களாக மாற்றப்பட்டதை நினைவு கூறும் இடத்தில் கண்ட வாசகம்.

First they came for the Communists, and I didn’t speak up,

because I wasn’t a Communist.

Then they came for the Jews, and I didn’t speak up,

because I wasn’t a Jew.

Then they came for the Catholics, and I didn’t speak up,

because I was a Protestant.

Then they came for me, and by that time there was no one left to speak up for me.

- Martin Niemöller





சுசி கணேசன் தான் டாப்பு

1 09 2009

கந்தசுவாமி பற்றி விமர்சனம் எழுதினால் தயாரிப்பாளரிடமிருந்து சாபம் கிடைப்பதுடன் , ‘லாஜிக்’கலா கேள்விக் கேட்டு ஒரு மடக்கு மடக்குறார் இயக்குனர் சுசி கணேசன். விழி பிதிங்கி ஓடுகிறார்கள் கேள்வி கேட்பவர்கள். இங்கே ஒரு சாம்பிள்

குமுதம்

ஏற்கெனவே பார்த்த சில படங்களின் சாயல் இருப்பதுபோல தெரிகிறதே?

சுசி

சமீபத்தில் ஹிட்டான எல்லா கதைகளும் ரவுடியின் காதல், கிராமத்தனமான காதல் என்றே வந்திருக்கின்றன. அப்போது யாரும் ஏற்கெனவே வந்த படத்தின் சாயல் தெரிகிறதே என்று கேட்டதில்லை. என்னுடைய படத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை வராத 30 காட்சிகள் உள்ளன. அதுவே எனக்குப் பெரிய வெற்றிதான்.

சுசியின் ‘அவன மாறச் சொல்லு’ பாலகுமாரன் ஸ்டைல் பதிலுக்கு கௌத்தம் மேனன் எல்லாம் பிச்சை வாங்கனும். இதெல்லாம் ஓ.கே. சுசி உங்க குரு படம் பார்த்து வரம் கொடுத்தாரா ?

திருப்போரூர் கந்தசுவாமிக்கு துண்டுசீட்டு!

நல்லதே செய்யும் கந்தசுவாமியே!!

படம் பார்த்து துன்பப்பட்டவர்களுக்கு தயாரிப்பாளர் எப்போது பணத்தைத் திரும்ப தருவார் , என்ன அவதாரத்தில் வந்து கொடுப்பார் என தெரிந்தால் மக்கள் பயமில்லாமல் பணத்தைப் பெற்று வாழ்த்துவார்கள்.





தாம்பு கயிறு – ஜாதியின் அடையாளம் – மடத்தனத்தின் எல்லை

12 08 2009

மடத்தனத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து ‘மடம்’ நடத்திக்கொண்டிருப்பவர்கள் , ராக்கி கயிறின் பின்னணி ஜாதி தான் என்ற அறிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.

caveman

தோழர் எழுத தோழர் வெளியிட ஒரே அறிவொளியில கண் கூசுகிறது.

எவ்வளவு கொணஷ்டையாக ஒரு மனிதனால் யோசிக்க முடியும்? நினைத்தால் சற்றே அயர்ச்சியாக இருக்கிறது.

அந்த கட்டுரையை எழுதியவரின் சொந்தமோ அல்ல நன்கு அறிமுகமான நண்பியோ அவருக்கு ராக்கி கட்ட வந்தால் என்ன செய்வார்?

முகம் மலர சிரித்த படியே கை நீட்டி ராக்கிக் கட்டிக் கொண்டு அதே கையுடன் ராக்கி ஜாதியின் அடையாளம் , ராக்கி ஆண்களிடமிருந்து பெண்களைக் காத்துக் கொள்ளவே அன்பினாலல்ல , தாலியும் ராக்கியும் பெண் அடிமைத் தனம் என்று கிறுக்குவார் என நினைக்கிறேன். ஆம் உபதேசம் , பகுத்தறிவதெல்லாம் ஊருக்கு மட்டுமே.

‘சிந்தனையாளர்கள்” அழிந்துவிட்டார்கள் என யார் சொன்னது ?

1. சந்தி சிரிக்கிர மாதிரி ஆகிடிச்சே வி.கோ!

2. ஒரு மடயனும், ‘தம்பி’ சீமானும்!

3. குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே பதிவர்





மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் : நம்பலாமா ?

5 08 2009

பகுத்தறிவதில் முக்கிய பங்கு தர்க்கத்துடன் கேள்வி கேட்பதும் சந்தேகிப்பதும்.

இந்தியா கணினி மயமானால் பசி பஞ்சம் காணாமல் போகும் என நம்பும் கூட்டம் ஒரு பக்கம் , கணினியில் அறிவியல் எழுதினால் கூட படிக்க ஆளில்லை என ஒத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் மறுபக்கம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வேலைப்பாட்டை யாராலும் மாற்ற முடியாது என அறிதியிட்டுக் கூறுகிறது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால் தினமணி இதனை சந்தேகிப்பதுடன் சில சாட்சிகளையும் முன் வைக்கிறது.

தேர்தல் ஆணையம் குறிப்பிடுவதைப் போல, இந்த மென்பொருள்கள் மாற்றவியலாத தன்மையுடன் தயாரிப்பிலேயே உள்ளுக்குள் பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான். அடிப்படையான மென்பொருள் மாற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவோர் எண்ணிக்கை மாறுகிறது. அவர்களுக்கான சின்னங்கள் தனித்தனியாக உள்ளன. சின்னங்களுக்கான தகவல் இணைப்பை மென்பொருளுடன் சேர்க்கும் பணி மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பில்தான் நடைபெறுகிறது.

பதிவு செய்யும் பொத்தானுக்கு அருகில் ஒரு கட்சியின் சின்னம் வெளிப்பார்வைக்கு பதிவு இயந்திரத்தில் தெரிந்தாலும், அதை அழுத்தினால் வேறு சின்னத்துக்கு வாக்குப் போய்ச் சேரும்படியாக இணைப்பை மாற்றித் தருவதற்கோ, அல்லது இரண்டாவது அணியின் சின்னத்தில் விழும் வாக்குகள் மூன்றாவது அணிக்கும், மூன்றாவது அணி சின்னத்தின் வாக்குகள் இரண்டாவது அணிக்கும் விழும்படியாக மாற்றி அமைக்கவோ அதிகாரிகள் நினைத்தால் முடியாதா என்பதே சில அரசியல் கட்சிகள் கேட்கும் அடிப்படையான கேள்வி.





கூகிள் ஆட் சென்ஸ் – கண்ணாம்பூச்சியாட்டம்

4 08 2009

உண்மையிலேயே சம்பாதிக்க முடியுமா ? இணையத்தில் நன்றாக எழுதுவதை வைத்து உண்மையிலேயே எதாவது காசு பார்க்க முடியுமா ? காசு பார்ப்தென்றால் ஒரு வணிக முறையில் எழுத்தாளர் தங்கள் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியுமா ?

எனது ஒற்றை வரி பதில் – இப்போது கண்டிப்பாக முடியாது.

என்ன சார் இப்படி , அதான் கூகிள் ஆட் சென்ஸ் இருக்கே என்பவர்களைப் பார்த்து சிரிப்பதா அல்ல அழுவதா என தெரியவில்லை. அப்பாவிகள் என எண்ணிக்கொள்ளலாம் , அவ்வளவே.

ஒரு மாதத்திற்கு 700,000 பார்வையாளர்கள் கொண்ட தளமே ததிங்கினத்தோம் போடுவதைப் பாருங்கள்

ஆனந்த விகடன் , குமுதம் ஏன் நக்கீரன் வரை இணையத்தில் சந்தா கட்டியே படிக்க வேண்டுமென்ற முடிவிற்கு சென்றதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதில் தற்போது விதிவிலக்காக இருப்பது உயிர்மை மற்றும் காலச்சுவடு. இவர்களும் நல்ல வாசகர் எண்ணிக்கைக் கூடியதும் சந்தா முறைக்கு செல்வார்கள் என்றே தோன்றுகிறது.

வேறு வழியில்லை எல்லாம் இலவசமென்று வந்து விட்டால் எழுத்தாளன் வீட்டில் அடுப்பெரிவதெப்படி ?

பத்திரிக்கைகளுக்கே இந்த நிலையெனில் தனிப்பதிவர்கள்…