என்னையும் ஜீப்புல ஏத்துங்க !


சிவசேனா தலைவர் பால் தாக்கரே கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களுடனும் நாள்தோரும் மல்லுக்கு நிற்கிறார்.

இது போன்ற நாடகங்களுக்கு முன்னோடி பால் தாக்ரே என்றாலும் சமீபகாலமாக அவரது பேரன் ராஜ் தாக்ரே இதனை திறம் பட செய்து வந்தார். இதனால் சிவசேனாவின் ‘டிரேட்மார்க்’ பறிபோய்விடுமோ என்று அஞ்சி பால் தாக்ரே வயதும் பாராமல் அரசியல் மேடையேறி மீண்டும் ஒரு வலம் வருகிறார்.

முதலில் சச்சின் , அடுத்து ராகுல் காந்தி , பிறகு ஷாருக்கான் என சர்ச்சையை வளர்த்த வண்ணம் இருக்கிறார் தாக்ரே.

எப்படியும் யாருக்காவது துரோகி பட்டம் கட்டி செய்திகளில் தொடர்ந்து இடம் பெருவது பால் தாக்ரேவின் வெட்ட வெளிச்சமான திட்டம்.

சிவசேனாவிற்கு மும்பைக் காவல்துறையில் நல்ல தொடர்புகள் இருப்பதாக அவுட்லுக் இதழ் தெரிவிக்கிறது. சீக்கிரமாக அந்த ஜீப்பில் யாராவது இடம் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.