கந்தசாமி இசை , பாடல்கள் : கண்றாவி

சமீபத்தில் பேண்டு மாஸ்டர் தேவி ஸ்ரீ பிரசாத் மிகக் கேவலமாக இசையமைத்துள்ள படம் கந்தசாமி. அதை விட மட்டமானது அதில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள்.

கலைப்புலியிடமிருந்து வரும் ‘உலகத் தர’ படங்கள் எல்லாம் ஏன் இப்படியிருக்கிறது என்று ஆளவந்தானுக்கே வெளிச்சம் !

இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் (for download)

Thendral Writer Stories Vol 1


Thendral Short Stories Vol 1

பசங்க: பழங்கள்ளு புது மொந்தை

பசங்க படம் பார்த்தேன். சின்ன பசங்க செம்ம லூட்டி அடிக்கிறாங்க. சினிமாத் தனமாவே எடுத்திருப்பதால் எதார்த்தம் எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.

எதார்த்தமாக எடுப்பதாக சில இடங்களில் இயக்குனர் அவரையே ஏமாற்றிக் கொள்கிறார். செல்போன் காமெடி நல்லா இருக்கு. விமல் இயக்குனர் அமீர் தம்பி போல் தெரிகிறார். குட்டி ராதிகாவின் ஒப்பனை சோபிக்கவில்லை.

என்னத்த தான் திருப்பிப் போட்டு எடுத்தாலும் ஏற்கனேவே நீங்க உங்க அக்கம் பக்கத்துல பார்த்துக்கிட்டுருக்கிற விஷயத்ததான் இந்த படமும் சொல்லுது. இது குழந்தைங்க படந்தானே என்பவர்களுக்கு இப்படத்தின் மூலம் குழந்தைகள் அடிதடி பழகிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

பெயருக்குப் பின்னாடி ஐ.ஏ.எஸ் போட்டுக்க இந்த படம் உதவலாம். ஆனால் யாருக்கு இப்போ ஐ.ஏ.எஸ் ஆகனும்னு தல விதி? வேற எதாவது போட்டுக்க சொல்லுங்க உங்க பசங்கள!

Contract : ராம் கோபால் வர்மா செய்த கொலை


குப்பை என்று ஒதுக்கப்பட வேண்டிய படம் Contract. தீவிரவாத திரைப்படங்களை இயக்குவதில் ராம் கோபால் வர்மா பழம் தின்று கொட்டை போட்டவர். ஆனால் Contract படத்தில் கொட்டை அவர் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது என்று நினைக்கிறேன்.

இதற்கு மேல் ஒன்றுமே இல்லை இந்த படத்தைப் பற்றி எழுத. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

வெள்ளையனுக்கு இட ஒதிக்கீடு

W E A V E R. Kanchipuram

ஏன் இட ஒதுக்கீடு ஏற்பட்டது என்பதை புரிந்து தான் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கேட்கிறாரா என்று தெரியவில்லை.
எங்கோ படித்த நினைவு “50-60 வருடம் முன்னவர்கள் செய்த தவறுக்காக இன்று இருப்பவர்களுக்கு ஏன் தண்டனை கொடுக்க வேண்டும்” என்பது போல எஸ்.வி.சேகர் பிராமணர்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசியிருக்கிறார்.
என்னைப் பொருத்தவரை எஸ்.வி.சேகரின் இந்த கோரிக்கை மைலாப்பூர் மனப்பான்மையே காட்டுகிறது. இவருக்கு பலமாக தமிழக பிராமணர் சங்கமும் செயல்படுகிறது என்று நினைக்கிறேன். எஸ்.வி.சேகரின் இந்த கோரிக்கையை கேட்டவுடன் எனக்குத் தோன்றியது ஏன் வெள்ளையர்கள் இன்னும் இந்தியாவில் இட ஒதிக்கீடு கேட்கவில்லை என்பதே ? வெளி நாட்டிலிருந்து வந்த இவர்கள் மக்கள் தொகையில் 2% சதவிகிதம் உள்ளதாக பால் வடியும் சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது. இவர்களில் பலர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு காசி , காஞ்சி என ஊர் ஊராக பரதேசி என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு அரசு சலுகைகளும் உதவித் தொகையும் தருவது அவசியம்.
அடுத்து பண்ணையார்கள் , ஜமீந்தார்கள் என ஒதுக்கீடு பட்டியல் வளரலாம் … இதில் சிலருக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு இருந்தால் அதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை !

கண்ணீர் ரணமானது

 

இலங்கை

கண்ணீர் ரணமானது

 

சில தவறுகள் என்றுமே நடந்துவிடக் கூடாது என்பதை சரித்திரம் மீண்டும் மீண்டும் பாடம் எடுக்கிறது.  ஆனால் மனிதன் அதனைக் கற்றுக் கொண்ட பாடில்லை.

இரு இன வாதிகள் போரிட்டால் என்ன நடக்கும் ? நாடே பன்றிகளைப் போல் இனவாதம் எனும் சேற்றில் உழன்று கொண்டிருக்கும். மக்களிடையே இனத்தாலோ , சாதியாலோ , நிரத்தாலோ பிளவு ஏற்பட்டுவிட்டால் என்றுமே  அம்மக்கள் ஒற்றுமையுடன் வாழ முடியாது. பிறகு ’இட ஒதுக்கீடு’ , மைநாரிட்டிகளுக்கு சலுகை என்று சலுகையை எதிர்ப்பார்ப்பவர்களாக அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் அல்ல கட்டம் கட்டபடுகிறார்கள்.

யூதர்களுக்கு ஹலோகாஸ்ட் , கருப்பர்களுக்கு வெள்ளையனின் நிரவெறி என்ற வரிசையில் தமிழனுக்கு சிங்களனின் இனவாதம் என்பது சரித்திரத்தில் அழியாத ரணம்.

இந்த ரணம் இரு முனைக் கொண்டது. 

***

உதாரணமாக மியான்மர். அந்நாட்டில் இராணுவத்திற்கு எதிராக நடந்த சமீபத்திய போராட்டத்தில் புத்த துறவிகள் மிகவும் மென்மையான முறையில் போராடினார்கள். உண்ணாநிலை , அறவழியில் கூட்டங்கள் என்று நடத்தினார்கள். துப்பாக்கி முன் நின்றும் வெறும் காவி துணியுடன் தன் மனவலுவை மட்டும் நம்பி நின்ற இந்த வீரர்களுக்குக் கிடைத்தது என்ன ? அடியும் உதையும். இதில் பலர் காணாமல் போயுள்ளனர். இருக்கவே இருக்கிறார் அகிம்சாவாதி சூ கி. வீட்டுச் சிறையில் பல்லாண்டுகளாக.

உலக நாடுகளால் மியன்மார் சர்வாதிகாரிகளை என்ன செய்ய முடிகிறது ?

அடுத்து டிபெட், இதே பௌத்த மதத்தின் மென்மையான கொள்கையினை முன்நிறுத்துபவர் தான் தலாய் லாமா. ஆனால் அவரால் இன்று வரை டிபெட் என்ற நாட்டின் தனித்துவத்தை நிலைநாட்ட முடியவில்லை.

ஆனால் பௌத்த மதம் அகிம்சையை மட்டும் கற்பிக்கவில்லை என்பதற்கு இன்றைய இலங்கை போதுமானது.

1950க்குப் பின் தென்னாப்பிரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் அகிம்சா வழியில் விடுதலை அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் நெல்சன் மண்டேலா விடுதலையாகும் வரை வன்முறையை பல நியாயங்களுடன் போராட்ட முறையாகக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.

ஆனால் இத்துனை அமைதிப் போருக்கும் உலக அளவில் இன்று வரை ஆதரவு கவிழ்ந்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

***

இருப்பினும் , கருப்பர்கள் எல்லாம் பாவமானவர்கள் , தமிழர்கள் எல்லாம் நெறியுடையவர்கள் , யூதர்கள் எல்லாம் பரந்த மனப்பான்மையுள்ளவர்கள் என்று சரித்திரத்தைக் காட்டி பொத்தாம் பொதுவாக எமொஷனல் பிளாக்மெயில் செய்வதும் தவறு.

வாட்டிகனின் கதோலிக்க சித்தாந்தங்களை எதிர்க்க கலிலியோ அறிவியலை ஆயுதமாக்கினான். ஷேக்ஸ்பியரோ லத்தின மொழியைவிட்டு ஆங்கிலத்தில் இலக்கியம் படைத்தார். இப்படி ‘அகிம்சை’ முறையில் எதிர்ப்பவர்கள் சரித்திரத்தில் நாயகர்களாக எந்த விளக்கமுமின்றி பொது மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கு எத்தகையத் சம்பாஷனைகள் தேவைப் படுகிறது பாருங்கள் – பொது மக்களின் பொருட்செல்வம் , பொய்யான ஊடக பிம்பம் மற்றும் பிரச்சாரம் , அரசியல் பகடைக் காய்கள் மற்றும் என்றும் குறையாத மக்கள் ஆதரவு. இது போதாதென்று தலைவனுக்காக உயிர் கொடுக்க அப்பாவிகள்.

போராடுபவர் பக்கம் அதிகாரமோ அரசாங்கமோ இல்லாத நிலையில் பொது மக்களின் ஆதரவை என்றுமே போராட்ட இயக்கங்கள் இழக்காமல் இருப்பதே அந்த போரட்டத்திற்கு செய்யும் நீதியாகும். தலையை மட்டுமே சுற்றி நடக்கும் போராட்டம் சர்வாதிகாரத்திற்கே வித்து. அத்துடன் இனவாதம் சேர்ந்தால் , நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது !

G20 போராட்டம் : புகைப்படங்கள்

லண்டனில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டை எதிர்த்து நடைப்பெற்ற போராட்ட புகைப்படங்கள் இங்கே காணலாம்.

மோதி பார்

மோதி பார்

Religulous: பகுத்தறிவு

மதம் பிடித்த யானையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதத்தைப் பற்றிய டாக்குமெண்டரி (விளக்கப் படம்), Religulous.

உலகில் மிக முக்கியமாகக் கருதப்படும் ஜூயிஸம் , கிருஸ்த்தவம் மற்றும் முஸ்லிம் மத நூல்களில் உள்ள கற்பிதங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் உள்ள பகுத்தறிவினை ஆறாய்வதே இந்த படத்தின் வெளிப்புற நோக்கம் என்றாலும் உள்ளூற ஓடும் செய்தி என்னவோ நேற்றைய மதம் என்பது இன்றைய நடப்பில் முட்டாள்த்தனம் என்பதே.

பில் மெஹர் டாக்குமெண்டரியை வழி நடத்துகிறார். உலகம் ஒரு நாள் அழியும் பின்பு ஏசு வருவார் என்பதை பல மத போதகர்களிடம் சென்று விளக்கம் கேட்கிறார். நல்லது நடக்க வேண்டுமென்றால் ஏன் ஒரு தூதுவரை கடவுள் நாடுகிறார். அவரே நேரே வந்து உலகில் உள்ள எல்லா தீயவைகளையும் அழித்து நல்லவற்றை நிலைநாட்டலாமே என்ற மிக எளிய கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

டச் (நேதர்லாண்ட்) நாட்டிலுள்ள மக்கள் முஸ்லிம் மதத்தை வெளிப்படையாக எதிர்கின்றனர். நாடளமன்ற உறுப்பினர் முஸ்லிம் மதம் ஒரு வன்முறை மதம் என்று வெளிப்படையாக டாக்குமெண்டரியில் தெரிவிக்கிறார். முஸ்லிம் மத போதகர்களிடமிருந்து வரும் ஒரே பதில் இல்லை…இல்லை…இல்லை…இதெல்லாம் அரசியல். ஆனால் ஏனோ பல இடங்களில் அப்பாவிகள் கொல்லப்படுவது இஸ்லாமிய மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் பயங்கிரவாதிகள் தான் என்பது மறுக்க முடியாத நிதர்சனமாக உள்ளது.

பின்பு ஆச்சாரமான ஜூஸ் செய்யும் ‘கண்டுபிடிப்புகளை’ கிண்டலும் செய்கிறார். ஆச்சாரமான ஜூக்களுக்கு சாபத் அனுஷ்டிக்கும் நாளில் நெருப்பு பயன்படுத்தக்கூடாதாம் – இதனை கோஷர் (Kosher) என்கிறனர்.

ஜீசஸ் வழி என்னுடைய வெளியுறவு கொள்கைகளில் ஒன்று என்று புஷ் அறிவிக்கையில் இராக் மீது குண்டு மழை படத்தில் வருகிறது.

BRONZE AGE-ல் கண்டுபிடுக்கப்பட்ட ஒரு மத்தை அறிவியல்றீதியாக நிலைநாட்ட நினைப்பது முட்டாள்த்தனம் என்பது பகுத்தறிய விரும்புவர்களுக்கு விளங்கும்.

வீட்டுனுள் பதிங்கியிருக்கும் மதத்தை எதிர்ப்பவர்கள் இந்த கடவுளை எதிர்க்க வெளிவர வேண்டும் என்ற குரலுடன் படம் முடிகிறது.

பாருங்கள் , பகுத்தறிய விரும்பினால்.

அறுவெறுப்பு : மும்பை , ஆஸ்ட்ரியா

மும்பை

தன் பெண்ணை வன்கொடுமை செய்த பொருக்கியைக் கண்டு. அவளது தாயைக் கண்டு. டுபாக்கூர் சாமியாரைக் கண்டு.

அக்குழந்தைகள் இனி தவறியும் பெற்றோர் என்ற போர்வையில் சுத்தும் இந்த காம மிருகங்களிடம் சிக்கக் கூடாது.

***
ஆஸ்ட்ரியா

தன் பெண் குழந்தையை 24 வருடங்களுக்கு மேலாக வீட்டில் அடக்கி வைத்து , அவளுக்கு 7 குழந்தைகளைக் கொடுத்த மெண்டல் கேஸ் இன்று மனநல மருத்துவமனையில்.

***

அம்மாக்களே கொஞ்சம் காப்பாத்துங்க !

ரஜினி படங்கள் வர காரணம் யார் ?

திடீரென்று ரஜினிகாந்திடமிருந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வருகிறது. நான் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன், நீங்கள் படம் எடுங்கள் என்று அவர் சொல்கிறார். அதற்கப்புறம் நீங்கள் படம் எடுக்காமல் எப்படி இருக்க முடியும்? எடுக்கவில்லையானால் தமிழ்நாட்டுக்கு எந்த நஷ்டமுமில்லை, ஆனால் நீங்கள்தான் வலிய வந்த சீதேவியை வாய்க்காலில் பிடித்துத் தள்ளிவிட்டு வேகுவேகென்று வெய்யிலில் நடந்து போகிறீர்கள் என்று அர்த்தம். ஆக, ரஜினிகாந்த்தின் படங்கள் எடுக்கப்படுவதற்கான காரணம், ரஜினி தருகிற கால்ஷீட்தான். குழப்பமாக இருக்கிறதா?

 

நம் தமிழ் படங்கள் ஏன் இப்படி…என்று உயிர்மையில் வினவுகிறார் , சுதேசமித்திரன்.