கடவுள் நம்பிக்கை: சரியா தவறா?

9 07 2008

ஆத்தீகம் நாத்தீகம். என்னடா புலிச்ச விஷயமா இருக்கே இத பத்தி எழுதனுமானு யொசிச்சேன். ஆனா இத பத்தி சிந்திக்க சிந்திக்க பல பரிமாணங்கள காண முடிகிறது.

 

இந்த பதிவு எந்த மதத்தையோ அல்ல சாதியையோ போற்றி பேசலை. டிஸ்களைமரில்லாம இவ்வளவு பதிவுகள போட்டேன். ஆனால் சில லூசுங்க வேர்ட்பெரஸ் பக்கம் சுத்திக்கிட்டுருப்பதால் முதலிலேயே சொல்ல வேண்டியுள்ளது.

 

கமலஹாசன்

 

இவரின் தசாவதாரம் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நம்பிக்கையுள்ளவர்களும்; கடவுள் நம்பிக்கை இல்லை என்று நம்பிக்கையில்லாதவர்களும் கூறுகின்றனர். நடிகர் கமல் பத்திரிக்கையாளர் சுதாங்கனிடம் சொன்ன ஒரு விஷயம்: கிருபாநந்தவாரியார் அவர்கள் தான் கட்டும் முருகன் கோயிலுக்கு காணிக்கை கேட்கிறார். கமலும் அதனை மறுக்காமல் கொடுக்கிறார். [நாத்தீக] நண்பர்கள் கண்டிக்கின்றனர். ஆனால் தன் தமிழாசானாகக் கருதுகின்ற வாரியாரிடம் எப்படி முடியாது என்பது? என்ற கேள்வியை எழுப்புகிறார் கமல்.

 

செல்வராகவன்

 

இயக்குனர் செல்வராகவன் பற்றி அவர் தம்பி தனுஷ் கூறியது. கடந்த சில வருடங்கள் முன் ஈரத்துண்டோடு சாமி அறைக்குள் சென்று சாமி கும்பிடுவான் செல்வா. பிறகு சிலரின் புத்தகங்களைப் படித்தான் இப்பொழுது கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறான்.

 

பொது வாழ்வில் உள்ள இருவரின் உதாரணங்களை காட்டியுள்ளேன். ஏன் இந்த முறண்பாடுகள்?

 

ஒரு சராசரி இளைஞனின் வாழ்வில் கடவுள் என்ற சொல் எப்படி வடிவம் பெறுகிறது? சற்று அலசுவோம்.

 

பிறக்கும் பொழுது ஒரு குழந்தைக்கு தன் பெற்றோர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புக் கிடைப்பதில்லை. அதே போல் தன் பெற்றோர்கள் பின்பற்றி வரும் மதத்தை அறியாமல் பின்பற்ற தொடங்குகிறது அந்த குழந்தை.

 

பள்ளிக்கு செல்கிறான் அங்கு வேறுவிதமாக சாமி கும்பிடுராங்க. குழம்பரான். ஒரு நாள் பள்ளியில் வேறு மதத்தின் பொதனைகள் அடங்கிய புத்தகத்தை கொடுக்கிறார்கள். அது என்னவென்று தெரியாமல் வீட்டிற்கு எடுத்து செல்கிறான். வீட்டில் நாம் இதனை படிப்பதில்லை என்று சொல்லி அந்த புத்தகத்தை குழந்தை கண் முன் பீரோவில் வைக்கின்றார் அப்பா. ஏம்பா நாம அத படிக்கறதில்லை என்று சிறுவன் கேட்க அம்மா சொல்கிறாள் படிக்கலாமே எல்லா மதங்களும் அன்பைத்தானே சொல்கிறது என்கிறாள். மீண்டும் குழப்பம்.

 

கடவுள் நம்பிக்கை எத்துனை பேருக்கு இருக்கிறது என்று அறிவியல் ஆசிரியர் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்க அனைவரும் கைத்தூக்கினர். ஆனால் முன் வரிசையில் ஒரு பெண் மட்டும் தூக்கவில்லை. ஆசிரியர் அந்த பெண்ணிடம் ஆச்சரியத்துடன் நம்பிக்கையில்லையா என்று வினவுகிறார். வகுப்பில் சலசலப்பு. அதே சிறுவனின் மனத்தில் குழப்பம். கடவுள் இல்லை என்ற ஒரு வாதமே புதியதாக இருக்கிறதே என்று எண்ணுகிறான்.

 

செய்திகளில் மக்கள் கடவுளுக்காக தங்கள் உடலை வருத்திக் கொள்ளும் காட்சிகளைக் காண்கிறான் அந்த பையன். உடல் சிலிர்கிறான். இதுக்கெல்லாம் ஆத்ம தைரியம் வேண்டும் என்கிறாள் அம்மா. அப்பா பேசாமல் அமைதியாக இருக்கிறார். தன் உடலை வருத்தி கடவுளைக் கும்பிடுவது காட்டமான பக்தியா இல்லை காட்டுமிறாண்டித்தனமா? கடவுள் இதை எதிர்ப்பார்கிறாரோ என்று அஞ்சுகிறான்.

 

நல்ல கல்லூரி கிடைக்க வேண்டும். தான் எழுதிய பரிட்சையில் சில பதில்களாலும் கண்ணுக்குத் தெரியாத ஒருவர் திருத்தும் மூடாலும் மதிப்பெண் குறையக் கூடாது என்று வேண்டுகிறான். இதைத் தருகிறேன் அதைத் தருகிறேன் என்று லஞ்சம் குடுக்க விழைகிறான். கடவுளை மீண்டும் நண்பனாக்கும் முயற்சி.

 

நல்ல படிப்பு நல்ல வேலை அமைந்தவுடன் பெற்றோர் கடவுளிடம் ஆசி பெற வேண்டும். நம்மூருக்கு போய் வருவோம் என்று அந்த இளைஞனை அழைக்கின்றனர். அரை மனத்துடன் செல்கிறான். ஏனேனில் அந்த ஊர் வெரும் காடு. பேருக்கு டீக்கடை ஒன்று மட்டும் தான் உண்டு. வேண்டிக் கொண்ட கடமைக்கு கடவுளை கும்பிடுகிறான்.

 

தான் வேலைப் பார்க்குமிடத்தில் ஒரு பெண்ணிற்கு தீவிரத் தீக்காயங்கள் அவருக்கு பண உதவி வேண்டும் என்று வேண்டுகொள் வருகிறது. 100 ரூபாய் கொடுக்க விழையும் பொழுது 10,000 ரூபாய் என்று ஒரு வரியை (டொனேஷன் புத்தகத்தில்) பார்த்து வியக்கிறான். கொடுத்தவர் சம்பளமே அவ்வளவு தான் என்றால் அது மலைக்கச் செய்தது. மனிதர்கள் தான் கடவுள் என்ற எண்ணம் பிறக்கிறது.

 

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் கடவுள் என்ற சொல் மாற்றமடைகிறது. அடுத்த முறை யாரும் ஆத்தீகம் நாத்தீகம் என்று பேசினால் அது என் சொந்த விஷயம் என்று சொல்ல நினைக்கிறேன். கமல் கேட்குதா? இந்த பதிவை எழுத்தாளர் சாருவின் வரிகளுடன் முடிக்கிறேன்

 

இப்போதெல்லாம் ஆத்திகவாதிகள்தான் ஆதங்கவாதிகளாக மாறி , மற்ற மதத்தினரை வெட்டிப் போடுவதும் அவர்கள் மீது குண்டு வீசுவதுமாக இருக்கிறார்கள். நாத்திகவாதிகள் பாவம் , இந்தக் குண்டு வீச்சு கலவரங்களுக்கிடையே தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி மஞ்சள் துண்டை அணிந்து கொண்டு பாபாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 பி. கு. Although many self-described atheists tend toward secular philosophies such as humanism and naturalism, there is no one ideology or set of behaviors to which all atheists adhere; and some religions, such as Jainism and Theravada Buddhism, do not require belief in a personal god. (விக்கிப்பீடியா)


செயல்கள்

தகவல்