இசம்ஸ் (isms)

கம்யூனிஸம் – சில நாட்கள் முன்பு நான் வினவின் பக்கத்திற்குச் சென்றேன். ஒலிம்பிக் தங்கம்…பித்தளை சுதந்திரமும் என்ற கட்டுரையைப் படித்தேன். பல முடிச்சுக்கள் சரியாக போடலை என்பதை சுட்டிக் காட்டினேன். உடனே என்ன புடிச்சிக்கிட்டாங்க. வெளிய வரத்துக்குள்ள நாக்கு தள்ளி போச்சு.

தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் – மிகவும் நம்புகிறார்கள். சமுதாயத்தின் அழுக்குகளைக் களைவதற்கு ஒரே அயுதம் கம்யூனிஸம் என்று. ரஷ்யா, சீனா, க்யூபா, வட கொரியா , பெங்கால் இவை எதுவுமே கம்யூனிஸ நாடில்லை என்று விளக்கம் தரப்பட்டது. அது மட்டுமல்ல போலி கம்யூனிஸ்டுகள் என்று வேறு எதோ இருக்காமே. உங்களுக்கு தெரியலைனா உடனே அந்த மறுமொழிகளைப் படிக்கலாம்.

இந்திய நாட்டை ‘அடிமை’த் தனத்திலிருந்து விடுவிக்க , பசி கொடுமையைப் போக்க , அறியாமையை ஒழிக்க , தீண்டாமையை விலக்க , விவசாயிகள் வாழ , அனைவருக்கும் சமமான சம்பளம் கிடைக்க [டீக்கடை முதலாளி முதல் டீ கிளாஸ் கழுபவர் வரை], ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல , ஊழலை களைய , மத நல்லிணக்கம் வளர என்று ஹோட்டலில் ரூம் போட்ட ‘மருந்துவர்’ போல அனைத்திற்கும் ஒரே மருந்து என்று பேசுகிறார்கள்.

கேட்க ரோம்ப நல்லாயிருக்கு…நீங்கள் யாரும் மேலும் வினவ நினைத்தால் Be Careful ["பாடிஷோடா"வடிவேலு பாணியில்].

கிரிட்டிசிஸம் செய்ய நம்ம மக்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. பிரவி குணம் அது. அகாஸ்மாத்தா நக்கலா இரண்டு வரி சொல்லி நம்பளை அசத்தியவர்கள் எத்துனைப் பேர்? இதில் திரைப்பட விமர்சனம் செய்வதென்றால் அல்வா சாப்பிடுவது போல் எனலாம் (நாக்கு இப்பவே ஊறுதே!). மதன்ஸ் திரைப்பார்வை கடந்த மூன்று வருடங்களா பார்த்து வருபவர்கள் இப்போ திடீர்னு ஹாசினியின் விமர்சனங்கள் டாப் என்கிறார்கள். அப்படியா என்று பார்க்க நேற்று சத்தியம் “விமர்சனம்” பார்த்தேன். ஞாயத்தராசு நிலையா நிக்குதுன்னு சொல்லிட்டாங்கோ.

திரை விமர்சனங்களை வலைப்பதிவுகளில் படிப்பதை விட சுவாரசியம் “நண்டு செண்டு” நிகழ்ச்சி (விஜய் டி.வி.யில்) ஆனால் அதற்கு கடிவாளம் போட்டு விட்டார்கள். இதைப் பார்க்கும் பொழுது தமிழ் சினமாகாரர்கள் சொல்லுவது என்னவென்றால் “எங்களுக்குத் தெரியாதா படம் குப்பைனு நீங்க வேற அத அசிங்கப்படுத்தனுமா?”…ம் ஞாயம் தான்!

மீடியாயிஸம் – இது யாம் கண்டு பிடிச்சது. சி.என்.என் – ஐ.பி.எனில் சென்னை , பம்பாய் , டெல்லி ஆகிய மாநகரங்களின் ரோடுகள் சரியில்லையாம். அரசாங்க அதிகாரிகள் ஊழல் செய்கிறார்களாம். இதனை எவ்வளவு நாள் தான் பொருத்து செல்வது என்று மக்களிடம் எழுற்சியூட்டும் விதமாக கேள்வி கேட்டுள்ளனர். ஏன் மின்சார வெட்டுகளைப் பற்றி பேசவில்லை? சரி ஒவ்வொன்றாக செய்வார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் அது என்ன மாநகரங்கள்? அதுவும் மூன்று மட்டும்? கல்கத்தா , பங்களுரூ , ஹைதிராபாத் இங்கெல்லாம் என்னவாயிற்று என்று கேட்டால் உங்களுக்கு இச்செய்தியின் சூட்சமம் விளங்கும். சரி கிராமங்களில் சாலைகளே இல்லையே என்று கேட்பவர்களுக்கு நான் அதைத்தான் அந்த செய்தி தளத்தின் மறுமொழியிட்டேன் ஆனால் அது இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை. மத்திய தர மக்கள் உணர்ச்சிகளுடன் விளையாடும் சி.என்.என் – ஐ.பி.என் வாழ்க!

உயிர் பிழைப்பான இந்த பேஷண்ட்?

இந்தியாவின் தலையில் மாட்டிக் கொண்ட கடப்பாரை

சற்றே ஓய்ந்திருந்த காஷ்மீர் விடுதலை இயக்கம் முழு வீரியத்துடன் கிளம்பியுள்ளது காரணம் அமார்நாத் நில பரிமாற்ற விவகாரம். இந்நிகழ்ச்சி இந்தியர்கள் தங்களைத் தானே அடிக்கடி கேட்டுக்கொள்ளும் கேள்வியையும் எழுப்புள்ளது.

1947ல் ஹிந்து மகராஜன் முஸ்லிம் பெரும்பான்மை மக்களின் உண்மையான சுதத்திரத்தை 62 ஆண்டுகள் தள்ளி போட்டுவிட்டாரா?

முதல் முறையாக 1990களிலிருந்து வன்முறையை விடுத்து அகிம்சை முறையில் மிகத்தீவிரமாக காஷ்மீர் மக்கள் இன்று அவர்களது விடுதலைக்குக் குரலேழுப்பியுள்ளனர்! மத்தியில் எதற்கும் வளையாத நிலைப்பாடில்லாத அரசாங்கம் செவிசாய்க்குமா? ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கும் இன்னும் கொஞ்சம் ராணுவம் இன்னும் கொஞ்சம் பணம் என்று செய்து செய்து இன்று பொது மக்களை விட ராணுவத்தின் எண்ணிக்கை அரை மில்லியனைத் தொட்டுவிட்டது. போலித் துப்பாக்கிச் சூடு, நரக வேதனைத் தரும் டார்ச்சர் சேம்பர்ஸ், கற்பழிப்பு, மனித உரிமைகள் மீறல் என்று கணக்கில் அடங்காத குற்றச்சாட்டுகள் ராணுவத்தின் மீது. இதில் போலீசும் சளைத்தது அல்ல! பயிர்களைக் காக்க வேண்டியவற்களே இன்று பயிர்களை மேய்வதாகக் குற்றச்சாட்டு.

100 ஏக்கரோ 200 ஏக்கர் நிலமோ திடீரென்று ஏன் தேவைப்பட்டது அமர்நாத் யாத்ரீகர்களுக்கு? அடிப்படைத் தேவை என்று ஏற்றுக்கொண்டாலும் , இத்திட்டதிற்கு முதலில் ஆதரவு தந்த முக்தி முகமது சயீது ஏன் நில மாற்றம் ஏற்பட்டவுடன் தன் நிலையை மாற்றிக் கொண்டு போராட்டத்தில் குதித்தார்? அரசியல்! காஷ்மீரில் தெரு விளக்கு எரியவில்லை என்றாலோ தண்ணீர் பிரச்சனை என்றாலோ அந்த போராட்டம் விடுதலைப் போராட்டமாக மாறிவிடும் என்ற சூட்ச்சமத்தை நன்றாகவே அறிந்திருப்பவர்கள் அரசியல்வாதிகள்.

இந்நிலையில் காஷ்மீர் போராட்டங்களில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க உடனே தான் எடுத்த நிலையை மாற்றிக் கொண்டது ஜம்மு-காஷ்மீர் அரசு. குலாம் நபி அசாதின் பதவியும் காவு வாங்கப்பட்டது.

இப்படி காஷ்மீரில் அரசியல் நடக்க , தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலத்தை சாதிச் சாயம் பூசி தடுத்தவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மக்களை தண்டிக்கும் வகையில் ஜம்மு ஹிந்துக்கள் மாநிலத்தை இரண்டாக பிரிக்க முற்பட்டுள்ளனர். காஷ்மீரிலிருந்து வரும் பழ வண்டிகளை இனி அனுமதிக்க மாட்டோம் என்று காஷ்மீர் மக்களின் ஜீவாதாரத்திற்கே சவால் விட்டுள்ளனர். சூட்ச்சமம் அறிந்த அரசியல் தலைவர்கள் இனி எங்கள் பழ வண்டிகள் பாகிஸ்தானுக்கு எடுத்து செல்வோம் என்றனர். எல்லைக் கோட்டைத் தாண்டும் போராட்டத்தைத் துப்பாக்கிச் சூட்டுடன் முற்றுப் புள்ளி வைத்தது அரசாங்கம். காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை அமர்நாத் பிரச்சனையே இல்லை என்றும். காஷ்மீர் இனி பாகிஸ்தான் என்றும் முழக்கமிடுபவர் ஜிலானி. ஜிலானியின் நிலை அவரது பேசியக் கூட்டத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் காஷ்மீர் அரசியல் கட்சிகள் அவரது நிலையை முழுமையாக ஏற்க மறுத்துள்ளனர்.

இவ்வாறு உண்மையிலேயே இப்பொழுது ஜம்மு-காஷ்மீர் இரண்டாகப் பிளந்துள்ளது. இந்த கடப்பாறையை எடுக்க என்ன மருந்து தர வேண்டும். இல்லை அறுவை சிகிச்சை தான் வழியா? கடப்பாறை எடுக்கும் பொழுது உயிர் பிரியுமா இல்லை அதிசயமாக உயிர் பிழைப்பான இந்த பேஷண்ட்?

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

எதை விமர்சிப்பது?

ராமன் தேடிய சீதை இசை வெளியீடு மிகவும் சுமார். வித்யாசாகர் ஏமாற்றி விட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது

சத்தியம் திரைப்படம் பார்ப்பவர்களைத் தான் விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டுமென தோன்றுகிறது. இரண்டு வருடங்களாக போட்டுக் குழப்பி ஒரு அமெச்சூர்த்தனமான படத்தைக் கொடுத்த விஷால் குழுவினர்க்கு வாழ்த்துக்கள். நடிக்க தெரியாமல் , வசனம் சரியான உணர்வோட பேசத் தெரியாமல் இவ்வளவு கணமான பாத்திரத்தை ஏற்று நடிக்கலைனு யார் அழுதா? ஐம்பது ரூபாய் புல்லட் வசனம் காக்க காக்க கௌத்தம் மேனனைத் தாக்கியது நல்லாயிருந்தது. பொறுக்கியில்ல போலீஸ் வசனம் சாமி ஹரிய தாக்கியது டாப். வாலிபால் சீன்கள் அனைத்தும் எனக்கு பாபாவை ஏனோ ஞாபகப்படுத்துகிறது. படத்தின் கிராபிக்ஸ் அட்டை டப்பாவால் செய்திருந்தால் கூட நல்லயிருந்திருக்கும். படத்தின் நோக்கம் சட்டதிற்கு உற்பட்டதே போலீஸ் என்கிற செய்தி கேட்க நல்லாயிருக்கு…

நீயா நானா வின் விடுதலை தின மன்றம் பட்டைய கெளப்பிட்டாங்க. இந்திய பொருளாதார ‘வளர்ச்சி’ய பத்தி பேசலாம் என்று தலைப்பைக் கொடுத்த கோபி இப்படி ஒரு இடி மின்னல் சுனாமிக்குத் தயாரா இருந்தாரா என்று தெரியலை. அவர் மட்டுமல்ல அங்கு பங்கு கொண்ட அனைவரும் சற்று கதி கலங்கி போகுமளவுக்கு பேசினாங்க அந்த அம்மணி! அவள் கிராமத்தில் +2வில் அதிக மதிப்பெண் பெற்ற பெண் அடுத்த வருடம் கையில் குழந்தையுடன் நிற்பதை விவரித்தது என் மனத்தை கணமாக்கியது.

கந்தசாமி மறுபடியும் சீன் போட வந்துட்டாங்க. கலைப்புலி தானு இதே போலத்தான் ஆளவந்தான் ரிலீஸ்க்கு முன்னாடி அப்படியாம் இப்படியாம் என்று கூத்துக்கட்டினார். அப்புறம் கமல் மேல் பழியத்தூக்கி போட்டு பத்திரிக்கையில் பேட்டிக் கொடுத்தார். பார்ப்போம் பீரங்கியா இல்ல புஸ்வானமான்னு…

விஷாலின் சன் டி.வி விடுதலைத் தினப் பேட்டி ஒரு கலவை. விஷால் நல்லா வெளிப்படையா பேசினாலும் அவரைப் பேட்டி எடுத்தவர் சின்னபுள்ளத்தனமா அவர தொட்டு பாத்து ‘சிக்ஸ் பேக்கில் ஐந்து இருக்கு’ என்பதெல்லாம் அநாகரீகம்! அது மட்டுமல்ல அவருடைய தனிபட்ட காதல் வாழ்க்கையை ‘affair’ என்று மீண்டும் மீண்டும் சொல்ல விஷாலே கடைசியில் அதைக் கண்டிக்க வேண்டியதாகிவிட்டது. சன் டி.வி.யில் யாருக்கும் பேட்டி எடுப்பதென்றால் என்னவென்றேத் தெரியாதா?

இந்த சிக்ஸ் பேக் பைத்தியம் நம்ம திரையுலகத்தில் மட்டுமா இல்ல மக்களும் இப்ப உடம்ப இப்படி வச்சிக்கனும் என்று ஆசைபடுகிறார்களா? எங்க வயத்துல புளியக்கரைக்காதீங்கப்பா!

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

நாணையத்தின் மறுபக்கம்

நாணையத்தின் மறுபக்கம் என்ற ஒலிப்பதிவினை இந்த வாரம் வெளியிட்டுள்ளேன். எந்த ஒரு சித்தாந்தமாக இருப்பினும் அல்லது நம்பிக்கையாயிருப்பினும் அதன் மறுபக்கம் என்று ஒன்று உண்டு. இதனை நீங்கள் எப்படி கையாள்வீற்கள் என்ற கேள்வியை வைப்பதே இந்த ஒலிப்பதிவின் நோக்கம்

http://podbazaar.castmetrix.net/download/144115188075857264/1/othersideofthecoin.mp3

 

சராம்சம்:

க்லோபல் வார்மிங் – உண்மையா பொய்யா?

குஜராத் கலவரமும் சமீபத்திய குண்டு வெடிப்புகளும்

Michael Crichton talking with Charlie Rose on PBS: video.google.com/googleplayer.swf?docId=-2663847011110488414 (watch from 22nd minute)

Al Gore talking to the British Media: video.google.com/googleplayer.swf?docId=-7243389866689882461 ( last 5 minutes has the expert panel)

A documentary on gujarat violence: video.google.com/googleplayer.swf?docId=3829364588351777769

podcasts இல் பதிவிடப்பட்டது . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

சாவர்யா (ஹிந்தி)

Saawariya – beloved

சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை என்பதை கேட்டிருக்கிறேன். ஆனால் முதல் முறையாக சாவர்யா (ஹிந்தி) படம் பார்த்தவுடன் அசந்து போனேன். படம் ஒரு கனவுலகத்தில் நடக்கிறது என்றே ராணி முகர்ஜியின் (குலாப்ஜி) குரல் நமக்கு நினைவூட்டுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் நீல வண்ணத்தில் தொய்ந்துள்ளது. ரவி. கே. சந்திரனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு அழகின் வடிவம்.

நடு இரவில் ஒரு பாலத்தில் மேல் ஒரு பெண்ணை (சகீனா) கண்ணிருடன் சந்திக்கிரான் ராஜ். தன்னை விட்டு பிரிந்த காதலக்குகாக (இமான்) காத்திருப்பது தெரியவருகிறது. பிரிந்து ஒரு வருடமாகியும் அவனை நம்பி காத்திருப்பளிடம் தன்னுடைய காதலை தயங்கி ஏங்கி சொல்கிறான் ராஜ். வேறு வழியின்று அந்த காதலை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் அவளின் காதலன் சொன்னது போல் அந்த பாலத்தில் அவளுக்காக காத்திருக்கிறான். காத்திருந்தவனிடம் செல்வாளா அல்ல புதியவினிடம் தங்குவாளா என்பது கதையின் முடிவு.

வெனிஸ் நகர கண்டோலாக்கள், பாரிஸ் நகர அலங்கார வளைவுகள் என ஐரோப்பிய நாகரீகத்தின் அற்புதங்களை கலைவடிவில் காட்டி அசத்தியுள்ளார் ஆர்ட் டைரக்டர். சொட்ட சொட்ட நனனைய வைக்கும் இந்த படத்தின் இசை. மொண்ட்டி என்ற புதிய இசையமைப்பாளரின் இரண்டு வருட இசையின் உழைப்பை நாம் ரசிக்கலாம், பருகலாம்.

ப்ராட்வே மேடை நாடகத்தை சினிமாவில் காட்டிய அனுபமே எனக்கு ஏற்பட்டது. இதுவே இயக்குனர் சன்ஞை லீலா பன்சாலியின் நோக்கமாகவும் இருந்திருக்கும். ஒரு கனவுலகம் என்று சொல்லும் பொழுது நமக்கு ஏற்படும் கற்பனைக்கு ஏற்ப எல்லாம் அழகு எல்லோரும் அழகு – பார்ப்பதற்கு. ஆனால் இந்த அழகினிடையே உள்ள நெளிவு சுழிவுகளை நமக்கு தெரிந்தோ தெரியாமலோ அழைத்து செல்வது தான் இந்த படத்தின் முதல் வெற்றி.

சாவர்யா, மொனாலிசா ஓவியம் போன்றது. நீஙகள் சிரித்தால் இந்த படமும் சிரிக்கும் நீங்கள் அழுதால் இந்த படமும் அழும். ஒரு இரண்டே கால் மணி நேரம் அன்றாட வாழ்க்கையை மறந்து கனவுலகிற்கு செல்வோம்!

http://saawariyathefilm.com/

திரை விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 1 மறுமொழி »

ரஜினி ஒரு சினிமாகாரர்

 

குசேல அரசியல் 

பாடம் கற்றுத் தந்த படம், குசேலன். இருக்கறது விட்டு பறக்கறதுக்கு ஆசைப் பட்டால் என்னவாகும் என்பதைத் தான் அனைவருக்கும் உணர்த்தியது ரஜினியின் வருத்தம் தெரிவிக்கும் நிகழ்ச்சி. எதிர்ப்பு அலைகள், எங்கு திரும்பினாலும், ‘மன்னிப்பு’ கோரிவிட்டார் கன்னடர்களிடம் என்று எழுதா இணையத்தளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

முதலில் நாம் என்ன உணர வேண்டும் ரஜினி ஒரு சினிமாகாரர். சினிமாகாரர்களின் ஒரே நோக்கம் தன் படத்தால் யாருக்கும் நஷ்ட்டம் ஏற்படக்கூடாதென்பது. பின் கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும். இதற்கு யாரையும் ஆசுவாசப்படுத்த முன்வருவார்கள் அல்லது யாரையும் எதிர்த்தும் பேசுவார்கள். உணர்ச்சி மூட்டைகள் தான் சினிமாகாரர்கள் (எ. கா. சத்தியராஜின் பேச்சு).

ரஜினி இப்பொழுது இரு பக்கமும் இடிபடும் மத்தளமாகத்தான் இருக்கிறார். கர்ம பூமிக்கும் மாத்ரு பூமிக்குமிடையே அல்லல் படுகிறார். யாரிடம் பற்றைக் காண்பிப்பது? இல்லை நான் இந்தியன் என்று சொல்லி நழிவிக் கொள்வதா? என்று பல கேள்விகள்.

அவனவனுக்கு வயிற்றுவலியும் தலைவலியும் வந்தால் தான் தெரியும் என்பார்கள். அது போல் ரஜினியின் நிலையில் நம்மை ஆட் படுத்திக்கொண்டால் தான் அவர் அனுபவிக்கும் வலி நமக்கு புரிய வரும். நான் ஆதரவா எழுதறேன் என்று எண்ண வேண்டாம். வார்த்தை பிரளுதல் மனிதனால் தவிர்க்க முடியாத ஒன்று. இன்று அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பராக் ஒபாமா புரட்டி பேசாத விஷயமே கிடையாது. இலக்கு ஜனாதிபதி பதவி என்று வந்த பின் ஓட்டுக்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் பேசி வருபவர் ஒபாமா. தாய் மண்ணே வணக்கம் என்று பாடிய பலர் அமேரிக்கன் கவுண்சிலேட் முன் தங்கள் “பற்றை” பரிசோதிக்கின்றனர். சென்ற முறை ஒரு கட்சிக்காக ஓட்டுப் போடும் பொழுது உங்கள் வீட்டில் எவ்வளவு ஆணித்தனமாக பேசினீர்கள், அடுத்த முறை அந்தத் தட்டை அப்படியே மாற்றி பேசாதவர்கள் எத்துனைப் பேர்? எத்துனை முறை ‘அமைதிக்காக’ பேசி பாகிஸ்தான் நம் மீது குண்டுகளை வீசியது?

பணம் பதவி இதற்கெல்லாம் அப்பார்பட்டவரல்ல ரஜினி என்பதைத் தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. அவர் மிக எளிமை சார் என்று சொல்பவர்கள் இந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசியல்…மூச்ச். இப்படி ஒரு நிலையை நாம் கண்டும் பாடம் கற்றுக்கொண்டாலும் மீண்டும் நம் ஓட்டு ஒரு சினிமாகாரக்குத் தான் போகப் பொகிறது என்பது நிதற்சன உண்மை!

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 2 மறுமொழிகள் »

வெட்டி ஞாயம்

இந்த வாரம் சில ”தமிழைக் காபாத்துங்க” பதிவுகளைக் கண்டேன்.

ஆங்கிலக் கல்வி கற்பித்து ‘சமச்சீர் கல்வியை’ பரப்ப விரும்பும் விஜயகாந்த் கண்டிப்பு

ஹிண்டுவில் வெளிவந்த தமிழ் கல்விக்கு ‘எதிரான’ கட்டுரைக்கு கண்டணம்

கிரந்த எழுத்துக்கள் தேவையா

இந்த பதிவுகளில் என்னுடைய மறுமொழிகளையும் விட்டுள்ளேன். ஆனால் எனக்கு வர வர வாக்குவாதம் பண்ண நேரமில்லை அது மட்டுமல்ல படித்தவர்கள், ‘பகுத்தறிவாதிகள்’ இவர்களின் எண்ணங்கள் எப்பொழுதுமே நாணயத்தின் மறுபக்கத்திற்கு ஆதரவு தானாகவே செல்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம் நான் வாக்கு வாதத்திலிரங்காமலிருப்பதற்கு.

முதலில் ‘சமச்சீர் கல்வியை’ பற்றி பார்ப்போம். கண்டிப்பாக ஆங்கிலத்தால் தான் சமச்சீர் கல்வி தர முடியும் என்பது எதிர்க்க வேண்டிய எண்ணம் தான். இதற்கு தீர்வென்ன? விஜயகாந்தை வாரினால் போதுமா? உலக தமிழ்ர்கள் மக்கள் தொகையே 10 கோடியைத் தாண்டாத பொழுது இவர்கள் எப்படி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவார்கள்? நடைமுறைக்கு ஒவ்வாத உவமைகள். ஐடியலிஸ்ட்டிக் எண்ணங்கள் எல்லாம் போற்றத்தக்கது தான் ஆனால் எப்படி செயல் படுத்துவீர்கள் என்று கேட்டால் , அது அரசாங்கம் தான் எதாவது செய்யனும் என்று நழுவ வேண்டியது. உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் முறையில் மட்டும் கல்வி புகட்ட எண்ணுவீர்களா என்றால் அதற்கு பதில் குழந்தை பிறந்தவுடன் பார்க்கலாம் என்கிறார்!

இரண்டாவதாக பத்ரியின் தமிழ் வழியில் கற்பது கடினமா என்ற பதிவிவைக் காண்போம். கட்டுரைத் தொடக்கத்தில் ஆசிரியர் இருவர் தமிழ் வழிக் கல்வியில் அறிவியல் மற்றும் கணித பாடங்கள் அல்லது சூத்திரங்களை மொழி பெயர்க்கும் பொழுது அதனை புரிந்துக் கொள்வது கடினம் என்கின்றனர். எடுத்துக்காட்டாக கிராவிட்டி என்ற சொல்லை ஒரு ஆசிரியர் சொல்கிறார். வெகுஜன ஊடகங்களில் புவி ஈர்ப்பு சக்தி என்று எழுதி கேட்டு படித்திருப்பதால் எனக்கும் உங்களுக்கும் இது தவரான எடுத்துக்காட்டு என்று உடனே தென்படும். ஆனால் இதுவே மொட்டர் பைக் என்ற சொல்லை எடுத்துக்காட்டாக காட்டியிருந்தால் என்ன செய்வார்கள். உடனே அதற்குத்தான் துள்ளுந்து இருக்கிறதே என்பீர்கள். துள்ளுந்து அங்காடியில் சென்று ”ஐயா , இந்த துள்ளுந்தின் விலை என்ன” என்று கேட்க இவர்கள் தயாரா? இதே நடைமுறை சிக்கலைத் தான் ஹிண்டுவில் அந்த ஆசிரியர் எடுத்துகாட்ட முயல்கிறார். தமிழை தமிழில் கற்பதே கடினம் என்று சொல்லுகின்றார் ஒரு ஆசிரியர். இதில் எனக்கும் உடன்பாடில்லை. அதனால் பத்ரி சொல்லுவது போல் காலத்திற்கு ஏற்றார் போல் பாட புத்ததங்களும் மாறவேண்டும்.

மூன்றாவதாக ‘இரவி’ எழுதியா கிரந்தம் என்ற பதிவினைக் காண்போம். மொழி எழுத்துக்கள் மாறுவது அழகு என்று ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ‘புது’(?!) எழுத்துக்கள் (ஷ், ஸ், ஸ்ரீ…) ஒரு மொழியில் வருவது இயல்பன்று என்று வாதிடுகிறார். ஞாயமே , ஆனால் தமிழின் தொண்மை , இயல்புகளை மீறியதால் தான் இவ்வளவு நூற்றாண்டுகள் கடந்து வந்துள்ளது. பெயர்ச் சொல்லிற்கு தமிழக அரசே அட்ச்சதைப்போட்டு வரிவிலக்குக் கொடுத்தப் படம் ‘சிவாஜி’. அப்படியிருக்க கணித மேதையின் பெயரை இராமானுசன் என்றுதான் விக்கிப்பீடியாவில் பதிவேன் ஏனேன்றால் இது தமிழர் மரபு என்பதும் பல்லாயிரக்கணக்கிலுள்ள மற்ற கிரந்த எழுத்தகளடங்கி விக்கிப்பதிவுகள் (எம்.ஜி.ஆர், ஜே. ஜெயலலிதா) இருக்க ஏன் ராமானுஜன் மட்டும் இராமானுசன் ஆக வேண்டும் என்ற வாதமும் எழுகிறது. கிரந்த எழுத்துக்களுக்கு எழுத்து வடிவமுண்டு , வெகுஜன ஊடங்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர் என்ற இரு பலத்த நடைமுறை ஆதாரங்கள் இருந்தாலும் இது ஆராயாமல் எடுத்த முடிவு என்று கூறுவது தமிழ் என்ற மொழியை எந்த வல்லுநரிடம் கேட்டு படைத்தனர் என்ற் கேள்விக்கு சமம்.

தமிழ் “பற்று” என்ற ஒலிப்பதிவை நான் இரு வாரங்கள் முன் செய்துள்ளேன். கேட்க விரும்புவர்களுக்கான சுட்டியிங்கே.

நடைமுறைக்கு சாத்தியமற்ற விவாதங்கள் , முடிவுகள் என்று தான் செல்கிறது இந்த மூன்று பதிவுகளும். நீங்கள் பேசும் அனைத்தும் அறைத்த மாவு. ஆகவே செயலில் காட்ட விரும்பாதவோர் இதனைப் பற்றி பேசினால் இதனை ஏற்க நான் மட்டுமல்ல நிதற்சன வாழ்கையின் தினசரி தடங்கல்களைத் தாண்டி தன் குடும்பத்தை முன்னேற்ற பாடுபடும் எந்த தமிழரும் ஒத்துக்கொள்ள மாட்டார்! சோத்துக்கு பின் தான் கொள்கை மண்ணாங்கட்டி எல்லாம்!

podcasts, அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 15 மறுமொழிகள் »