ஆயிரம் யானைகளைப் போர்களத்தில் கொன்றவன் பரணி, யுவன் இசையில் நந்தா படத்தில் கேட்டது. ஆனால் அதற்கு முன் பரணி புராணம் நடத்திய தமிழாசிரியர் நினைவுக்கு வருகிறார், செய்யுள் நினைவிற்கு வரவில்லை!
சரி வாங்க போர்களத்தில் குதிப்போம்.
அடியே கொல்லுதே – கேட்டாச்சு பார்த்தாச்சு – மஞ்சள் நிலவே பாடலை சட்டென்று நினைவுக்குக் கொண்டுவருகிறது. அதே இண்டர்லுயூட்ஸ்.
நெஞ்சுக்குள் பெய்திடும் – ஹரிஹரன் – கொஞ்சல்கள் – கோர்வையற்ற வரிகள்
என் வீட்டைப் பார்
என்னைப் பிடிக்கும்
ஓ ஷாந்தி
*ஏத்தி ஏத்தி – கண்டிப்பாக எங்கேயொ கேட்டப் பாடல் – ஷங்கர் படத்தின் உளரல் பாடல்கள் வரிசையில் இதை சேர்க்கலாம்.
*முந்தினம் பார்த்தேன் – சூரியாவின் “அலகான” குரல் தொடக்கம். நரேஷ் பாடும் தமிழ் பாடல்கள் அனைத்தும் கார்த்திக்கை நினைவூட்டுகிறது. 12பி -முத்தம் முத்தம் பாடல் சாயல் ஸாகஸ்சபோன் இசைக்கும் பொழுது தெரிகிறது. பெண் குரல் மிகவும் கீச் – பிராஷாந்த் பெண் குரலில் பாடியதால் பிரஷாந்தினி என்று பெயர் வைத்தனரோ ?
*ஒ ஷாந்தி – மாலினி போல் ஷாந்தியும் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக இருந்தாலும் ஆச்சரியமில்லை. உயிரை ஏந்தி சென்றாய் என்று வரும் வரிகள் இதனை உறுதி செய்கிறது.
இந்த பாட்டு காப்பி என்று சொல்பவற்களுக்கு பதில் – ஆமாங்கோ ஆமாங்கோ ஆனா மூலம் தான் கண்டுபிடிக்க முடியாது! ஏன்னா பல மேற்கத்திய பாடல்கள் இது போலவே உள்ளது!
*அவ என்ன என்ன – முதல் ஹெரிஸ் ஜெயராஜ் டப்பாங்கூத்து என்று சொல்லலாம். கார்த்திக்கின் குரல் இதனை டப்பாங்கூத்திலிருந்து கல்லூரி கானா போல் செய்துவிடுகிறது.
துணியால் கண்ணையும் கட்டி
கையக் காத்துல நீட்டி
தேடுற அவள
தனியா எங்கே போனாளோ ?
டப்பாங்கூத்துக்கு நடுவில் ஓப்ரா பாணியில் “ஓ ஓ” என்று பாடுவது தான் புயூஷனோ ?
*அனல் மேலே பனி துளி
பாம்பே ஜெயஸ்ரீயினை சுதா ரகுநாதன் வைத்து ரீப்பிலேஸ் செய்துள்ளார் பரணி இசையமைப்பாளர். நம் சத்தியம் இசைக்கு வைத்த முதல் குற்றச்சாட்டிற்கு செவி சாய்த்து விட்டாரோ ஹெரிஸ்!
குன்னக்குடி வைத்தியநாதன் போல் வயலின் கிங் கிங் என்று இசைக்கிறது. நல்ல பாடகர்களை அழைத்து இரண்டு கட்டையில் பாடவைப்பது தான் ஹெரிஸின் அசாத்தியத் திறமைக்கு எடுத்துக்காட்டு என்று நினைக்கிறேன். தான் மட்டுமில்லாது மற்ற நல்ல கலைஞர்களையும் “இவ்வளவு தானா” என்று கேட்குமளவுக்கு பாட வைக்கிறார்.
பாட்டுக்கு நடுவில் தூக்கம் வந்தால் அதற்கு சுதா ரகுநாதனின் தாலாட்டே காரணம் மற்றும் எந்த ஏற்றக் குறைவுமில்லாது இசையும் துணை போகிறது!
இந்த முறை ஹெரிஸின் பாடல்களிலிருந்தே காப்பி அடிக்கிறார் என்பதே ஆறுதல்! ஆனால் படமே forrest gump என்ற ஹாலிவுட் ஆஸ்கர் வென்ற படத்தின் தழுவல் எனும் பொழுது இதெல்லாம் எம்மாத்திறம் ?
அஞ்சல பாட்டத் தவிற மற்ற பாடல்கள் எனக்கு போதுமடா சாமினு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க!




Sing for the moment