
வெங்கட் பிரபுவிடம் பலர் மிகவும் எதிர்பார்கின்றனர். இந்த எதிர்பார்ப்புக்குறியவரா வெங்கட் ?
சென்னை 28 என்கிற சென்னை நகர் சுண்ணாம்பு கால்வாய் சந்துகளில் நடந்த வயதுக்கு வந்த அறிவால் வளராத மனிதர்களுடைய தினசரி வாழ்கையைப் படமாக எடுத்து வர்த்தகரீதியில் வெற்றி கண்டவர் வெங்கட்.
ஒரு படம் வெற்றி பெற நட்சத்திரங்கள் தேவையில்லை என்று சென்னை 28 மற்றும் சரோஜா படங்களில் நிரூபித்துள்ளார் என்பது சில பிரபலங்களின் கருத்து.
இவர்களிடம் ஒரு கேள்வி – வெங்கட் பிரபுவின் முதல் தமிழ் படம் – உன்னை சரணடைந்தேன் – பார்த்தீர்களா ? படத்தில் இரு நாயகர்கள் ஒரு பெண்ணின் காதலுக்காக போராடுவார்கள். பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் கிடையாது. ஏன் எஸ்.பி..பி.சரண் தான் ”கதாநாயகன்” என்று சொல்லலாம்.
இப்படி நட்சத்திரங்கள் இல்லாத முதல் படம் ”தோற்றது” இவர்கள் கண்ணில் ஏன் படவில்லை ?
***
சென்ற வாரம் சரோஜா படம் திரையரங்கில் கண்டேன். என்னைப் பொருத்த வரை எதிர்பார்ப்பு இருந்த படம்.
படம் வெளியான முதல் வாரத்தில் சரோஜா என்ற படம் Judgment Day என்ற ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி என்று தகவல்கள் கசியத் தொடங்கிவிட்டது.
இருந்தாலும் சென்னை 28ன் அணி செய்த படமாச்சே…என்ன தான் செய்தார்கள் என்று 54 மைல் சென்று பார்த்தேன். படம் பார்த்து இரண்டு மணி நேரம் கழித்து, எவ்வளவு தான் உதட்டு சாயம் பூசினாலும் பன்னி பன்னிதான் என்ற வாசகம் வந்து வந்து போனது மனத்தில்.
பள்ளி மாணவி கடத்தல் என்பதை இவ்வளவு சிறு பிள்ளைத் தனமாகக் காட்டவே முடியாது என்று நினைக்கிறேன். பிரேம்ஜி அமரன் நடித்த கணேஷ் குமார் பாத்திரம் – அரை வேக்காடா இல்ல அப்பாவியா இல்ல இரண்டுமா ?
நாற்காலியில் கட்டிப் போட்டிருக்கும் பள்ளி மாணவியைப் பார்த்து காதல் வயப்பட்ட ஒரே தமிழ் சினிமா கதாபாத்திரம் பிரேம்ஜி அமரனின் கதாபாத்திரமாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே கயவன் கையில் கசங்கும் அந்த பள்ளி மாணிவியை பாரதிராஜா தேவதைகள் கொண்டு காதலிக்கும் காட்சி அமைத்த வெங்கட் பிரபுவின் ”நகை”ச்சுவையை என்னவென்று சொல்ல ?
இன்சென்ஸிடிவ்! பிடோஃபிலிக்!!
திரில்லர் ஆனா காமெடி என்பது உப்மா ஆனா இனிக்கும் என்று சொல்வது போல் உள்ளது.
இவரிடம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் அளவுக்கெல்லாம் சரக்கு இல்லை என்பதே என் கருத்து. சாரு சொன்னாலும் சரி இல்ல எல்லா ஊடகங்கள் போற்றினாலும் சரி வெங்கட் பிரபுவின் சரக்கு டி.வி.டிகளில் தான் உள்ளது என்பது நிதர்சன உண்மை.

I mostly agree with you here. He is just another director, nothing to rave about. Chennai 28 was decent but did nt impress me much. Saroja is nothing extraordinary again.
சரி கார்திக்.
அடுத்த முறை தமிழில் கருத்துக்கள் எழுதினால் மகிழ்வேன்.