
ஏன் இட ஒதுக்கீடு ஏற்பட்டது என்பதை புரிந்து தான் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கேட்கிறாரா என்று தெரியவில்லை.
எங்கோ படித்த நினைவு “50-60 வருடம் முன்னவர்கள் செய்த தவறுக்காக இன்று இருப்பவர்களுக்கு ஏன் தண்டனை கொடுக்க வேண்டும்” என்பது போல எஸ்.வி.சேகர் பிராமணர்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசியிருக்கிறார்.
என்னைப் பொருத்தவரை எஸ்.வி.சேகரின் இந்த கோரிக்கை மைலாப்பூர் மனப்பான்மையே காட்டுகிறது. இவருக்கு பலமாக தமிழக பிராமணர் சங்கமும் செயல்படுகிறது என்று நினைக்கிறேன். எஸ்.வி.சேகரின் இந்த கோரிக்கையை கேட்டவுடன் எனக்குத் தோன்றியது ஏன் வெள்ளையர்கள் இன்னும் இந்தியாவில் இட ஒதிக்கீடு கேட்கவில்லை என்பதே ? வெளி நாட்டிலிருந்து வந்த இவர்கள் மக்கள் தொகையில் 2% சதவிகிதம் உள்ளதாக பால் வடியும் சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது. இவர்களில் பலர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு காசி , காஞ்சி என ஊர் ஊராக பரதேசி என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு அரசு சலுகைகளும் உதவித் தொகையும் தருவது அவசியம்.
அடுத்து பண்ணையார்கள் , ஜமீந்தார்கள் என ஒதுக்கீடு பட்டியல் வளரலாம் … இதில் சிலருக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு இருந்தால் அதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை !

Sing for the moment