மடத்தனத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து ‘மடம்’ நடத்திக்கொண்டிருப்பவர்கள் , ராக்கி கயிறின் பின்னணி ஜாதி தான் என்ற அறிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.

தோழர் எழுத தோழர் வெளியிட ஒரே அறிவொளியில கண் கூசுகிறது.
எவ்வளவு கொணஷ்டையாக ஒரு மனிதனால் யோசிக்க முடியும்? நினைத்தால் சற்றே அயர்ச்சியாக இருக்கிறது.
அந்த கட்டுரையை எழுதியவரின் சொந்தமோ அல்ல நன்கு அறிமுகமான நண்பியோ அவருக்கு ராக்கி கட்ட வந்தால் என்ன செய்வார்?
முகம் மலர சிரித்த படியே கை நீட்டி ராக்கிக் கட்டிக் கொண்டு அதே கையுடன் ராக்கி ஜாதியின் அடையாளம் , ராக்கி ஆண்களிடமிருந்து பெண்களைக் காத்துக் கொள்ளவே அன்பினாலல்ல , தாலியும் ராக்கியும் பெண் அடிமைத் தனம் என்று கிறுக்குவார் என நினைக்கிறேன். ஆம் உபதேசம் , பகுத்தறிவதெல்லாம் ஊருக்கு மட்டுமே.
‘சிந்தனையாளர்கள்” அழிந்துவிட்டார்கள் என யார் சொன்னது ?
1. சந்தி சிரிக்கிர மாதிரி ஆகிடிச்சே வி.கோ!
