சுசி கணேசன் தான் டாப்பு

கந்தசுவாமி பற்றி விமர்சனம் எழுதினால் தயாரிப்பாளரிடமிருந்து சாபம் கிடைப்பதுடன் , ‘லாஜிக்’கலா கேள்விக் கேட்டு ஒரு மடக்கு மடக்குறார் இயக்குனர் சுசி கணேசன். விழி பிதிங்கி ஓடுகிறார்கள் கேள்வி கேட்பவர்கள். இங்கே ஒரு சாம்பிள்

குமுதம்

ஏற்கெனவே பார்த்த சில படங்களின் சாயல் இருப்பதுபோல தெரிகிறதே?

சுசி

சமீபத்தில் ஹிட்டான எல்லா கதைகளும் ரவுடியின் காதல், கிராமத்தனமான காதல் என்றே வந்திருக்கின்றன. அப்போது யாரும் ஏற்கெனவே வந்த படத்தின் சாயல் தெரிகிறதே என்று கேட்டதில்லை. என்னுடைய படத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை வராத 30 காட்சிகள் உள்ளன. அதுவே எனக்குப் பெரிய வெற்றிதான்.

சுசியின் ‘அவன மாறச் சொல்லு’ பாலகுமாரன் ஸ்டைல் பதிலுக்கு கௌத்தம் மேனன் எல்லாம் பிச்சை வாங்கனும். இதெல்லாம் ஓ.கே. சுசி உங்க குரு படம் பார்த்து வரம் கொடுத்தாரா ?

திருப்போரூர் கந்தசுவாமிக்கு துண்டுசீட்டு!

நல்லதே செய்யும் கந்தசுவாமியே!!

படம் பார்த்து துன்பப்பட்டவர்களுக்கு தயாரிப்பாளர் எப்போது பணத்தைத் திரும்ப தருவார் , என்ன அவதாரத்தில் வந்து கொடுப்பார் என தெரிந்தால் மக்கள் பயமில்லாமல் பணத்தைப் பெற்று வாழ்த்துவார்கள்.

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன