துளி வெட்கம் வேண்டாமா…சுப.வீரபாண்டியன்

விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு …சுப.வீரபாண்டியன். கடந்த தமிழக ஆட்சியின் ஊழலுக்கு மெளன சாட்சியாக விளங்கிய சுப.வீரபாண்டியனின் தலையங்கம். துளி வெட்கம் வேண்டாமா ?

அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ் கருவி என்று சொல்வதற்கு சுப.வீக்கு என்ன நியாயம் இருக்க முடியும். ஊழல் பெருச்சாளிகள் ஏன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என புத்தகம் எழுதியவர் ஆதாரங்கள் தர இயலுமா இல்லை வெறும் பிலாக்கணம் தானா ?

எல்லாவற்றையும் திராவிடத்திலும் ஈழத்திலும் கொண்டு போய் முடிக்கும் சுப.வீ  விளம்பரமில்லாத ஊழல் எதிர்ப்பை இவர் ஏன் நடத்தவில்லை ? ஊழல் குடும்பத்துடன் சேர்ந்ததால் ‘ஊழல்னு ஒண்ணுமே இல்லை’ என்று அடுத்த பகுத்தறிவுக் கட்டுரை வந்தாலும் வியப்பில்லை. ஆரிய – திராவிட பிளவு தான் ஆ.ராஜா மீது வழுக்குத் தொடர காரணம் என பகுத்தாய்ந்து வழக்காடியவர் இவர்.

காந்தியின் பெயரின்றி பெரியார் பெயருடன் செய்தால் இவருக்கு எல்லாம் நலம். திராவிட கோயில் பூசாரியாக இருப்பது தான் பகுத்தறிவோ ?