இந்த வாரம் சில ”தமிழைக் காபாத்துங்க” பதிவுகளைக் கண்டேன்.
ஆங்கிலக் கல்வி கற்பித்து ‘சமச்சீர் கல்வியை’ பரப்ப விரும்பும் விஜயகாந்த் கண்டிப்பு
ஹிண்டுவில் வெளிவந்த தமிழ் கல்விக்கு ‘எதிரான’ கட்டுரைக்கு கண்டணம்
இந்த பதிவுகளில் என்னுடைய மறுமொழிகளையும் விட்டுள்ளேன். ஆனால் எனக்கு வர வர வாக்குவாதம் பண்ண நேரமில்லை அது மட்டுமல்ல படித்தவர்கள், ‘பகுத்தறிவாதிகள்’ இவர்களின் எண்ணங்கள் எப்பொழுதுமே நாணயத்தின் மறுபக்கத்திற்கு ஆதரவு தானாகவே செல்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம் நான் வாக்கு வாதத்திலிரங்காமலிருப்பதற்கு.
முதலில் ‘சமச்சீர் கல்வியை’ பற்றி பார்ப்போம். கண்டிப்பாக ஆங்கிலத்தால் தான் சமச்சீர் கல்வி தர முடியும் என்பது எதிர்க்க வேண்டிய எண்ணம் தான். இதற்கு தீர்வென்ன? விஜயகாந்தை வாரினால் போதுமா? உலக தமிழ்ர்கள் மக்கள் தொகையே 10 கோடியைத் தாண்டாத பொழுது இவர்கள் எப்படி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவார்கள்? நடைமுறைக்கு ஒவ்வாத உவமைகள். ஐடியலிஸ்ட்டிக் எண்ணங்கள் எல்லாம் போற்றத்தக்கது தான் ஆனால் எப்படி செயல் படுத்துவீர்கள் என்று கேட்டால் , அது அரசாங்கம் தான் எதாவது செய்யனும் என்று நழுவ வேண்டியது. உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் முறையில் மட்டும் கல்வி புகட்ட எண்ணுவீர்களா என்றால் அதற்கு பதில் குழந்தை பிறந்தவுடன் பார்க்கலாம் என்கிறார்!
இரண்டாவதாக பத்ரியின் தமிழ் வழியில் கற்பது கடினமா என்ற பதிவிவைக் காண்போம். கட்டுரைத் தொடக்கத்தில் ஆசிரியர் இருவர் தமிழ் வழிக் கல்வியில் அறிவியல் மற்றும் கணித பாடங்கள் அல்லது சூத்திரங்களை மொழி பெயர்க்கும் பொழுது அதனை புரிந்துக் கொள்வது கடினம் என்கின்றனர். எடுத்துக்காட்டாக கிராவிட்டி என்ற சொல்லை ஒரு ஆசிரியர் சொல்கிறார். வெகுஜன ஊடகங்களில் புவி ஈர்ப்பு சக்தி என்று எழுதி கேட்டு படித்திருப்பதால் எனக்கும் உங்களுக்கும் இது தவரான எடுத்துக்காட்டு என்று உடனே தென்படும். ஆனால் இதுவே மொட்டர் பைக் என்ற சொல்லை எடுத்துக்காட்டாக காட்டியிருந்தால் என்ன செய்வார்கள். உடனே அதற்குத்தான் துள்ளுந்து இருக்கிறதே என்பீர்கள். துள்ளுந்து அங்காடியில் சென்று ”ஐயா , இந்த துள்ளுந்தின் விலை என்ன” என்று கேட்க இவர்கள் தயாரா? இதே நடைமுறை சிக்கலைத் தான் ஹிண்டுவில் அந்த ஆசிரியர் எடுத்துகாட்ட முயல்கிறார். தமிழை தமிழில் கற்பதே கடினம் என்று சொல்லுகின்றார் ஒரு ஆசிரியர். இதில் எனக்கும் உடன்பாடில்லை. அதனால் பத்ரி சொல்லுவது போல் காலத்திற்கு ஏற்றார் போல் பாட புத்ததங்களும் மாறவேண்டும்.
மூன்றாவதாக ‘இரவி’ எழுதியா கிரந்தம் என்ற பதிவினைக் காண்போம். மொழி எழுத்துக்கள் மாறுவது அழகு என்று ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ‘புது’(?!) எழுத்துக்கள் (ஷ், ஸ், ஸ்ரீ…) ஒரு மொழியில் வருவது இயல்பன்று என்று வாதிடுகிறார். ஞாயமே , ஆனால் தமிழின் தொண்மை , இயல்புகளை மீறியதால் தான் இவ்வளவு நூற்றாண்டுகள் கடந்து வந்துள்ளது. பெயர்ச் சொல்லிற்கு தமிழக அரசே அட்ச்சதைப்போட்டு வரிவிலக்குக் கொடுத்தப் படம் ‘சிவாஜி’. அப்படியிருக்க கணித மேதையின் பெயரை இராமானுசன் என்றுதான் விக்கிப்பீடியாவில் பதிவேன் ஏனேன்றால் இது தமிழர் மரபு என்பதும் பல்லாயிரக்கணக்கிலுள்ள மற்ற கிரந்த எழுத்தகளடங்கி விக்கிப்பதிவுகள் (எம்.ஜி.ஆர், ஜே. ஜெயலலிதா) இருக்க ஏன் ராமானுஜன் மட்டும் இராமானுசன் ஆக வேண்டும் என்ற வாதமும் எழுகிறது. கிரந்த எழுத்துக்களுக்கு எழுத்து வடிவமுண்டு , வெகுஜன ஊடங்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர் என்ற இரு பலத்த நடைமுறை ஆதாரங்கள் இருந்தாலும் இது ஆராயாமல் எடுத்த முடிவு என்று கூறுவது தமிழ் என்ற மொழியை எந்த வல்லுநரிடம் கேட்டு படைத்தனர் என்ற் கேள்விக்கு சமம்.
தமிழ் “பற்று” என்ற ஒலிப்பதிவை நான் இரு வாரங்கள் முன் செய்துள்ளேன். கேட்க விரும்புவர்களுக்கான சுட்டியிங்கே.
நடைமுறைக்கு சாத்தியமற்ற விவாதங்கள் , முடிவுகள் என்று தான் செல்கிறது இந்த மூன்று பதிவுகளும். நீங்கள் பேசும் அனைத்தும் அறைத்த மாவு. ஆகவே செயலில் காட்ட விரும்பாதவோர் இதனைப் பற்றி பேசினால் இதனை ஏற்க நான் மட்டுமல்ல நிதற்சன வாழ்கையின் தினசரி தடங்கல்களைத் தாண்டி தன் குடும்பத்தை முன்னேற்ற பாடுபடும் எந்த தமிழரும் ஒத்துக்கொள்ள மாட்டார்! சோத்துக்கு பின் தான் கொள்கை மண்ணாங்கட்டி எல்லாம்!

Sing for the moment