சக்கரகட்டி இனிக்கல: இசை விமர்சனம்

15 07 2008

சென்ற மூன்று மாதங்களில், சக்கரகட்டி, ஏ.அர். ரஹமானின் மூன்றாவது பாடல் ஆல்பம். வழக்கமா எ.அர்.அர் வருஷத்துக்கு நாலு இந்திய படங்களுக்கு இசையமைத்தால் பெரிய விஷயம். இப்ப எ.அர்.அர் பொட்டு தாக்குரார். இசைய விமர்சனம் செய்ய சற்று தயங்கினேன். இதற்கு முக்கிய காரணம் ஏ.அர்.அர் இசையமைத்தாலே அதற்கு ஈடு இணையில்லை என்று எண்ணும் ‘ரசிகர் கூட்டம்’. அப்படி பயந்தா வேலைக்கு ஆகுமா என்ன? சரி நேரா விமர்சனத்தில குதிப்போம்.

சாந்தனுவின் முதல் படம் சக்கரகட்டி. சாந்தனு நடிகர் பாக்கியராஜின் மகன்.

1. டாக்ஸி டாக்ஸி – சாந்தனுவின் அறிமுகப் உச்சக்கட்ட பாடல் என்று நினைக்கிறேன். ஆனா ஏன் டாக்ஸி டாக்ஸினு பாடுறாங்கனு புரியலை. பளாசீ, பென்னி தயால் மற்றும் ஜாவத் அலி பாடியுள்ளனர். நல்ல தாளம் இருக்கு. கண்டிப்பா ஆடலுக்காக இசைக்க பட்ட பாடல். பாடல் வரிகள நேரா குப்பைல பொடலாம். என்ன பாடுராங்கனு அவங்களுக்கு புரியல நமக்கு தமிழ்ல பாடலாமேனு தொனுது! நா. முத்துகுமார தூக்கத்துல எழுப்பி பாட்டெழுத சொன்னதால வாய்க்கு வந்தத ஒளறி வெச்சுருக்கார். “ஆசம் டாக்ஸி”னு அப்பப்ப ஒரு பெண் குரல். எதுக்கு இந்த எக்ஸ்டரா வேலைனு தெரியலை. பளாஸியின் ராப் எல்லாம் புளிச்சி போச்சு.

2. மருதாணி விழியில் ஏன்? – அட என்ன அர்த்தம். கண்ல மருதாணி அப்படியே மூக்குல சக்கரகட்டியிருந்தா? இந்த பாடல் சிவாஜியில் வரும் வாஜி வாஜி வாசமிருக்கு. மதுஸ்ரீ தன் வழக்கம் போல தமிழ முழுங்கறாங்க. (எ. கா.) பாலையும் ‘கல்’லாய் பார்க்கிறாய்.

3. ஐ மிஸ் யூ டா – பாட்டு ஒரு சலனம் நிறைந்த குரல் பாட தொடங்குகிறது (சின்மையீ). சுத்தமா எந்த வகையிலும் (genre) இந்த பாடல சேர்க்க முடியாது. உடனே இது தான் ஏ.அர்.அர் பலம்னு சப்ப கட்டுகட்டாதீங்க. நிசமாவே பொரடிக்கும் பாடல் தான், தூக்கம் வருது.

4. எலே – பாட்டின் மெட்டு நல்லாயிருக்கு. ஸ்காட்லேண்டு/ஐயர்லாண்டு நாட்டுகளின் பாரம்பரிய இசையின் வயலின்களை கேட்கலாம். மௌத்தார்கன் பாட்டினை மெருகேற்றுகிறது. வழக்கம் போல நா. முத்துகுமார் சொதப்பல் வரிகள். நரேஷ் ஐயர் மற்றும் கிருஷ் இந்த பாடலை பாடியுள்ளனர் ஆனால் எனக்கு கார்த்திக்கின் குரலே கேட்கிறது.

5. சின்னம்மா சிலக்கமா – இந்த பாடல் மீனாக்ஷி (meenaxi) என்ற ஹிந்தி படத்திலிருந்த அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ரஹ்மான் இசையமைத்த படம் தான். நடனமாடக் கூடிய பாடல்.

6. நான் எப்போது பெண்ணானேன்? – இந்த பாடல் மீனாக்ஷி என்ற ஹிந்தி படத்திலிருந்த அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என் மனத்திற்கு மிக நெருங்கிய பாடல் இது (ஹிந்தியில்). ஒரு நலிணம் காண முடியும். ரீனா பரத்வாஜ் குரல் இந்த பாடலின் அழகை கூட்டுகிறது. ஹிந்தியிலும் இவரே பாடியுள்ளார்.

ஏ.ஆர்.அர் வெளியிட்ட மற்ற இரு சமீபத்து ஆல்பங்களை விட இதில் பாடல்கள் மிகவும் சுமார். ‘எலே’ தவிர எந்த பாடலிலும் புதுமையில்லை. பாடல் வரிகளுக்கு பாடலாசிரியருக்கே அர்த்தம் தெரியுமானு தெரியலை. உதயா, வரலாறு போல் மறக்க வேண்டிய வெளியீடு. கடைக்கு போய் “தாம் தூம்” மற்றும் “சக்கரகட்டி” இருந்தா நான் தாம் தூம் வாங்குவேன்.