சரோஜா – திரில்லர் ஆனா காமெடி

11 10 2008

வெங்கட் பிரபுவிடம் பலர் மிகவும் எதிர்பார்கின்றனர். இந்த எதிர்பார்ப்புக்குறியவரா வெங்கட் ?

சென்னை 28 என்கிற சென்னை நகர் சுண்ணாம்பு கால்வாய் சந்துகளில் நடந்த வயதுக்கு வந்த அறிவால் வளராத மனிதர்களுடைய தினசரி வாழ்கையைப் படமாக எடுத்து வர்த்தகரீதியில் வெற்றி கண்டவர் வெங்கட்.

ஒரு படம் வெற்றி பெற நட்சத்திரங்கள் தேவையில்லை என்று சென்னை 28 மற்றும் சரோஜா படங்களில் நிரூபித்துள்ளார் என்பது சில பிரபலங்களின் கருத்து.

இவர்களிடம் ஒரு கேள்வி – வெங்கட் பிரபுவின் முதல் தமிழ் படம் – உன்னை சரணடைந்தேன் – பார்த்தீர்களா ? படத்தில் இரு நாயகர்கள் ஒரு பெண்ணின் காதலுக்காக போராடுவார்கள். பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் கிடையாது. ஏன் எஸ்.பி..பி.சரண் தான் ”கதாநாயகன்” என்று சொல்லலாம்.

இப்படி நட்சத்திரங்கள் இல்லாத முதல் படம் ”தோற்றது” இவர்கள் கண்ணில் ஏன் படவில்லை ?

***

சென்ற வாரம் சரோஜா படம் திரையரங்கில் கண்டேன். என்னைப் பொருத்த வரை எதிர்பார்ப்பு இருந்த படம்.

படம் வெளியான முதல் வாரத்தில் சரோஜா என்ற படம் Judgment Day என்ற ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி என்று தகவல்கள் கசியத் தொடங்கிவிட்டது.

இருந்தாலும் சென்னை 28ன் அணி செய்த படமாச்சே…என்ன தான் செய்தார்கள் என்று 54 மைல் சென்று பார்த்தேன். படம் பார்த்து இரண்டு மணி நேரம் கழித்து, எவ்வளவு தான் உதட்டு சாயம் பூசினாலும் பன்னி பன்னிதான் என்ற வாசகம் வந்து வந்து போனது மனத்தில்.

பள்ளி மாணவி கடத்தல் என்பதை இவ்வளவு சிறு பிள்ளைத் தனமாகக் காட்டவே முடியாது என்று நினைக்கிறேன். பிரேம்ஜி அமரன் நடித்த கணேஷ் குமார் பாத்திரம் – அரை வேக்காடா இல்ல அப்பாவியா இல்ல இரண்டுமா ?

நாற்காலியில் கட்டிப் போட்டிருக்கும் பள்ளி மாணவியைப் பார்த்து காதல் வயப்பட்ட ஒரே தமிழ் சினிமா கதாபாத்திரம் பிரேம்ஜி அமரனின் கதாபாத்திரமாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

ஏற்கனவே கயவன் கையில் கசங்கும் அந்த பள்ளி மாணிவியை பாரதிராஜா தேவதைகள் கொண்டு காதலிக்கும் காட்சி அமைத்த வெங்கட் பிரபுவின் ”நகை”ச்சுவையை என்னவென்று சொல்ல ?

இன்சென்ஸிடிவ்! பிடோஃபிலிக்!!

திரில்லர் ஆனா காமெடி என்பது உப்மா ஆனா இனிக்கும் என்று சொல்வது போல் உள்ளது.

இவரிடம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் அளவுக்கெல்லாம் சரக்கு இல்லை என்பதே என் கருத்து. சாரு சொன்னாலும் சரி இல்ல எல்லா ஊடகங்கள் போற்றினாலும் சரி வெங்கட் பிரபுவின் சரக்கு டி.வி.டிகளில் தான் உள்ளது என்பது நிதர்சன உண்மை.





சாமான் நிக்காலோ, சரோசா!

25 07 2008

தோஸ்த்து படா தோஸ்த்து -யுவன் இசைக்கும் நட்புக்கான பாடல்கள் காத்திருந்து கேட்கலாம். பாடலின் முதல் இரு வரிகள் புரியவில்லை. அது என்ன “சவுத்…”?

கோடான கோடி - மத்திய ஆசிய மற்றும் ஆரபு நாட்டின் இசை கலவை. தீ பிடிக்க தீ பிடிக்க பாடலை நினைவூட்டுகிறது. ஆட்டம் போடக்கூடிய பாடல். ரைனாவின் குரல் வசீகரம்.

நிமிர்ந்து நில் – ஓய் ஓய் ஓய் நிமிர்ந்து நில், இந்த பாடல் வகையை யுவன் வல்லவன் மற்றும் தாஸ் படங்களில் செய்துள்ளார். ஆனால் சங்கர் மஹாதேவன் குரல் பாட்டிற்கு ஒரு அழகிய திமிரை தருகிறது. லாகானில் ச்லெ ச்லோ போல பாடலின் வரிகள் தட்டி எழுப்ப வருகிறது.

மாப்பிள்ளைக்கு – கல்யாண வீட்டு பாட்டு. ப்ரேம்ஜி அமரன் ராப் பாடல் பாடிப் பாடி வார்த்தை நழிவுது தழுவுதுனு பாடுராரு. கண்டிப்பா எங்கேயோ கேட்ட பாடல், முக்கியமா காதலர் தினம் ஞாபகம் வருது (டாண்டியா ஆட்டம்). எஸ்.பி.பீ.சரண் குரல் தனியாக தெரிகிறது.

சீக்கி சீக்கி – “அந்த ஆதியும் அந்தமும் பெண்ணிடம்” என்று ஸ்ரீகளின் தாளம். யுவன் மற்றும் யுவதிகள் ஆட்டம் போடலாம். கண்டிப்பா எங்கேயோ கேட்ட பாடல். இப்போதைக்கு கள்வனின் காதலியின் இவன் கட்டில் நாட்டு மன்னன் தான் என்பது உதிக்கிறது.

மை லைஃப் – ஒரு தனி ஆங்கில பாடல் உள்ளது. தான்வி மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.

http://www.guruji.com/music?q=Saroja&cat=d0,albumtitle

நல்ல கலவை. முதலில் கொஞ்சிக் கொஞ்சி யாரும் பாடாதது ஆறுதல். அடுத்து புதிய முயற்சிகளை காண முடிகிறது. அது மட்டுமில்லாம் எந்த தயக்கமுமில்லாமல் ஒரு தனிக் குழுவின் பாடலை தன் ஆல்பத்தில் சேர்த்த யுவனுக்கு ஒரு ‘ஓ’. பல நாட்கள் கழித்து யுவன் ஆல்பம், ஒரு நல்ல ஆரம்பம்.