பா.சி உண்மை சொல்கிறாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது

15 03 2009

வெளியுறவு அமைச்சர் பா.சிதம்பரம் சி.பி.ஜ தலைவர் குணசேகரன் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 500 ஏக்கர் அரசு நிலத்தை கொடுத்து தனியார் தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்டதாக குணசேகரன் பா.சிதம்பரம் மீது புகார் கூறினார்.

இந்த புகார் பொய் என்று குணசேகரம் மீது மானநஷ்ட்ட வழக்குத் தொடுத்துள்ளார் பா.சிதம்பரம்.

***

பொய் புகார் கூறுவோருக்கு இது ஒரு பாடமாக இருந்தாலும் அடுத்த முறை பா.சி உண்மை சொல்கிறாரா என்று நாம் தெரிந்து கொள்ள அவர் யார் யார் மீது வழக்குத் தொடுக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும் :)





சீமானுக்கு வழக்கறிஞர்கள் தந்த பரிசு

13 03 2009

வழக்கறிஞர் போராட்டம் காரணமாக உடனடி நிவாரண வழக்குகள், ஜாமீன் வழக்குகள் போன்ற வழக்குகளில் கட்சிக்காரர்களே நேரில் ஆஜராகி வாதாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

இயக்குனர் சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர், நேற்று உயர்நீதிமன்றத்தில் சீமானின் ஜாமீன் மனு குறித்து நேரில் தோன்றி வாதாடினார்.

[தினதந்தி] [செய்தி கிடைத்த இடம் ஒரு குழுமத்தில்]

***

கருத்துரிமையை நிலைநாட்ட நீதிமன்றம் சென்றாலும் அங்கு வாதாட வழக்கறிஞர்கள் கிடைக்க மாட்டார்கள் போல் உள்ளது.