Saawariya – beloved
சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை என்பதை கேட்டிருக்கிறேன். ஆனால் முதல் முறையாக சாவர்யா (ஹிந்தி) படம் பார்த்தவுடன் அசந்து போனேன். படம் ஒரு கனவுலகத்தில் நடக்கிறது என்றே ராணி முகர்ஜியின் (குலாப்ஜி) குரல் நமக்கு நினைவூட்டுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் நீல வண்ணத்தில் தொய்ந்துள்ளது. ரவி. கே. சந்திரனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு அழகின் வடிவம்.
நடு இரவில் ஒரு பாலத்தில் மேல் ஒரு பெண்ணை (சகீனா) கண்ணிருடன் சந்திக்கிரான் ராஜ். தன்னை விட்டு பிரிந்த காதலக்குகாக (இமான்) காத்திருப்பது தெரியவருகிறது. பிரிந்து ஒரு வருடமாகியும் அவனை நம்பி காத்திருப்பளிடம் தன்னுடைய காதலை தயங்கி ஏங்கி சொல்கிறான் ராஜ். வேறு வழியின்று அந்த காதலை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் அவளின் காதலன் சொன்னது போல் அந்த பாலத்தில் அவளுக்காக காத்திருக்கிறான். காத்திருந்தவனிடம் செல்வாளா அல்ல புதியவினிடம் தங்குவாளா என்பது கதையின் முடிவு.
வெனிஸ் நகர கண்டோலாக்கள், பாரிஸ் நகர அலங்கார வளைவுகள் என ஐரோப்பிய நாகரீகத்தின் அற்புதங்களை கலைவடிவில் காட்டி அசத்தியுள்ளார் ஆர்ட் டைரக்டர். சொட்ட சொட்ட நனனைய வைக்கும் இந்த படத்தின் இசை. மொண்ட்டி என்ற புதிய இசையமைப்பாளரின் இரண்டு வருட இசையின் உழைப்பை நாம் ரசிக்கலாம், பருகலாம்.
ப்ராட்வே மேடை நாடகத்தை சினிமாவில் காட்டிய அனுபமே எனக்கு ஏற்பட்டது. இதுவே இயக்குனர் சன்ஞை லீலா பன்சாலியின் நோக்கமாகவும் இருந்திருக்கும். ஒரு கனவுலகம் என்று சொல்லும் பொழுது நமக்கு ஏற்படும் கற்பனைக்கு ஏற்ப எல்லாம் அழகு எல்லோரும் அழகு – பார்ப்பதற்கு. ஆனால் இந்த அழகினிடையே உள்ள நெளிவு சுழிவுகளை நமக்கு தெரிந்தோ தெரியாமலோ அழைத்து செல்வது தான் இந்த படத்தின் முதல் வெற்றி.
சாவர்யா, மொனாலிசா ஓவியம் போன்றது. நீஙகள் சிரித்தால் இந்த படமும் சிரிக்கும் நீங்கள் அழுதால் இந்த படமும் அழும். ஒரு இரண்டே கால் மணி நேரம் அன்றாட வாழ்க்கையை மறந்து கனவுலகிற்கு செல்வோம்!
http://saawariyathefilm.com/

Sing for the moment